பெரியார் சாக்ரடீஸ் தந்தையார் நினைவேந்தல் நிகழ்வு

விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் தந்தை கோவிந்தசாமி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி முடி வெய்தினார். கோவிந்த சாமி  நினைவேந்தல் நிகழ்வு 09.01.2021 சனிக் கிழமை மாலை 6 மணியள வில், மேல்மலையனூர், அத்தியந்தல் அண்ணா நகர், கு.பச்சையம்மாள் பெரியசாமி திடலில் நடை பெற்றது. நிகழ்விற்கு கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். பெரியார் சாக்ரடீஸ் வரவேற்பு கூறினார்.

கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கோவிந்தசாமியின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். ஏ.கே.மணி – மதிமுக மாநில துணை செயலாளர், பா.செந்தமிழ்ச்செல்வன் –  திமுக, வெற்றிச்செல்வன் – விசிக மண்டல செயலாளர், சி.செல்வராஜி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காத்தவராயன் – பகுத்தறிவு பாடகர் நெல்லிக்குப்பம், புதுவை கோகுல் காந்தி – தமிழக வாழ்வுரிமை கட்சி, பகுத்தறிவு விஜி – தமிழர் மாமன்றம், மருத்துவர் தன்மானம் ஆகியோர் கோவிந்தசாமியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பரிமளா சாக்ரடீஸ் நன்றி கூறினார்.

நிகழ்வில், கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள், அய்யனார், சூலூர் பன்னீர் செல்வம், தமிழ் பேரரசு கட்சி பழ.கார்த்திபன், மக்கள் ஜனநாயக கட்சி – முகிலன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் – ஆல்பர்ட் வேளாங்கன்னி, போளூர் வள்ளலார் மன்றம் – தமிழன்பு, திராவிடர் விடுதலைக் கழகம் விழிப்புரம் மாவட்டத் தலைவர் அ.இளையரசன், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ், செஞ்சி உழவர் கூட்டமைப்பு தலைவர் வையவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், புரட்சிப் பெரியார் முழக்கம் 20 சந்தா தொகையான ரூ. 4000/- வழங்கப்பட்டது.

 

பெரியார் முழக்கம் 21012021 இதழ்

You may also like...