சென்னையில் நடந்த கருத்தரங்கு : நாட்டை ஆள்வது அரசியல் சட்டமா? சனாதன தர்மமா?

‘நாட்டை ஆள்வது அரசமைப்புச் சட்டமா? சனாதன தர்மமா?’ எனும் தலைப்பில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் பிரிவு (முற்போக்கு மாணவர் கழகம்), ஜனவரி 23ஆம் தேதி சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவை அரங்கில் கருத்துப் பகிர்வு, நிகழ்ச்சியை மாலை 5 மணியளவில் நடத்தியது. பேராசிரியர் அருணன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் நாட்டை ஆள்வது சனாதன தர்மமே என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தி.க. பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி பேசினர். ‘அரசமைப்புச் சட்டமே’ எனும் தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், ‘ஆழ்வார்க்கடியார்’ மை. பா. நாராயணன் ஆகியோர் பேசினர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நிறைவுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 31012019 இதழ்

You may also like...