எழுவர் விடுதலை – கழக தலைவர் முதல்வரிடம் கோரிக்கை

ஏழ்வர் விடுதலை – கழகத் தலைவர் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை !

நேற்று (14-1-2019) இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்து பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரும் விண்ணப்பத்தை விளக்கிக் கையளித்தோம்.
முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.

You may also like...