குப்பை பொறுக்கும் ‘பூணூல்’கள்!

பார்ப்பனக் கோட்டையான சென்னை மேற்கு மாம்பலத்தில் சத்குரு வேத பாடசாலை, சுப்ரமணிய வீதியில் உள்ளது. இந்த வீதியில் குப்பைகள் தேங்கிப் போய் கிடந்த நிலையில், ‘வேதம்படிக்கும்பார்ப்பனசிறுவர்கள், ‘பூணூல்அணிந்த கோலத் துடன் வீதிகளில் இறங்கி குப்பைகளைப் பொறுக்கினார்கள். இதைப் படம் பிடித்து முகநூலில் ஒருவர் வெளியிட்டார். உடனடியாக இதை வரவேற்று முகநூலில் 2300 விருப்பப் பதிவுகள் விழுந்தன. அவ்வளவு தான். ஆடிப் போனது சென்னை மாநகராட்சி. உடனே, ‘பூணூல்தரிக்காதசூத்திரர்’, ‘பஞ்சமர்களைக் கொண்டுவந்து இறக்கி, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நாள் முழுதும் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்வதும், குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்துவதும், ‘பஞ்சமர்’, ‘சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்டதர்மம்’; வேதம் ஓதுவதையேதர்மம்மாக்கிக் கொண்டபிராமணர்கள்’ – இப்படி வீதிகளில் இறங்கிகுப்பைகளை சுத்தம் செய்யத் தொடங்கினால், நாடு அதைத் தாங்குமா?

எனவே தான் மாநகராட்சி அதிரடியாகஇறங்கிதர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

பெரியார் முழக்கம் 13082015 இதழ்

You may also like...

Leave a Reply