யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிசந்திரனுடன் கலந்துரையாடல் 11012019 சென்னை

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்

யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிசந்திரனுடன் கலந்துரையாடல்

நாள்: 11-1-2019, வெள்ளி, மாலை 4 மணி

இடம்: திராவிடர் விடுதலைக் கழகம், டாக்டர் நடேசன் சாலை, சிட்டி செண்டர் அருகில், மயிலாப்பூர்

வருகின்ற 11-1-2019 வெள்ளி அன்று மாலை 4 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிச்சந்திரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்துள்ளோம். இதில் ஈழத்தில் உள்ள இப்போதைய அரசியல் நிலைமை, மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரானப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இக்கலந்துரையடலில் தங்கள் அமைப்புச் சார்பாக தாங்களோ அல்லது வேறு நிர்வாகியோ கலந்து கொள்ளுமாறு ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்

கொளத்தூர் தா.செ. மணி,

ஒருங்கிணைப்பாளர்,

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

தலைவர், திவிக

தொடர்புக்கு: 99419 31499, 7299230363

You may also like...