கருஞ்சட்டை பேரணி – கழக தலைவர் அழைப்பு

டிச.23 திருச்சியில *கருஞ்சட்டைப் பேரணி*
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி
அவர்களின் அழைப்பு :

அன்பார்ந்த தோழர்களுக்கு,
வணக்கம்.
தந்தை பெரியாரின் 45ஆம் நினைவுநாளை (24.12.1973) முன்னிட்டு வரும் திசம்பர் 23/2018 அன்று திருச்சியில் ‘காவி பயங்கரவாத்த்தை’ வீழ்த்த இலட்சம் பேர் பங்கேற்கும் கருஞ்சட்டைப் பேரணி- மாநாடு நடைபெற உள்ளது.

பேரணியையும், மாநாட்டையும்
வெற்றிபெற செய்யவேண்டியது நம்முடைய கடமையும், உரிமையும் ஆகும்.

குறிப்பாக காவி பயங்கரவாதம் தமிழகத்தையும், இந்திய மக்களையும் கார் இருளுக்குள் தள்ளிவிட்டது. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் மனிதனை மனிதன் அடித்துக் கொல்லும் கொடூரமான கொடுங்கோல் ஆட்சியை மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்வும், பிஜேபியும் நடத்திக் கொண்டு இருக்கின்றது.

இதற்கு மேலும் பொறுமையாக
கடந்து செல்வது. தன்மானமுள்ள தமிழனுக்கு அவமானம். தமிழினத்தை பாதுகாக்க தமிழ் இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டிய தருணம் இது.

மேலும் மாக்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய , தமிழ்த்தேசிய, சனநாயக சிந்தனையாளர்கள் ஒரு குடையின் கீழ் திரள உள்ளனர்.

இங்கே எந்த வேறுபாடும் இல்லை. காவி பாசிசம் கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும். என்கின்ற ஒற்றை இலக்கோடு களம் இறங்கி உள்ள பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில், நாமும் இணைந்து பங்கபளிப்போம் வாருங்கள் தோழர்களே!

*இது* *தொடர்பான* *ஈரோடு- நாமக்கல்* *மாவட்டத்திற்கான* *ஆலோசனைக் கூட்டம்* *08.12.2018 சனி மாலை 6.00* *மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில்* *நடைபெற உள்ளது. இதையே அழைப்பாக ஏற்று பெரியாரிய உணர்வாளர்கள் அனைவரும் வருக!* *தங்களுக்கு தெரிந்த தோழர்களுக்கு இந்த அழைப்பைப் பகிருங்கள்!!*

எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்து விட்டு திசம்பர் 23 திருச்சியில் ஒன்று கூடுவதை முதல் வேலையாக மாற்றுவோம். திருச்சி மாநகரம் கருஞ்சட்டைக் கடலாக காட்சியளிக்கட்டும். பெரியாரின் சாட்சியங்களே திரண்டு வாரீர்..!
“””””””””””””””””””””””””””’’'”””
*பெரியாரிய* *உணர்வாளர்கள் கூட்டமைப்பு,
7094198 005,9047521117,

You may also like...