பெரியாரின் ‘பயணம்’

90-வது வயதில்  மூ  180 கூட்டம்.

91-வது வயதில்  மூ  150 கூட்டம்.

93-வது வயதில்  மூ  249 கூட்டம்.

94-வது வயதில்  மூ  229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலி களுடன்.

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்…..

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட் டிருக்கும்…..

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்கச் செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்கச் செய்தார் ?

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா?

நான் சொல்வதை கேட்டால் தான் உனக்கு சொர்க்கம்;

என்னை வணங்காவிட்டால் நரகம்

என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக் கிடையில்…………

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் என்னை நீ ஆதரித்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்,

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக் கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக்கொள் இல்லை யென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே……..

முகநூலிலிருந்து

நிமிர்வோம் ஜுலை 2018 மாத இதழ்

You may also like...