கொளத்தூர் நோக்கி புனித யாத்திரை சென்ற திருப்பூர் மாவட்ட கழகம்

கொளத்தூரில் 3/2/18 அன்று நடக்கவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” என்ற கருத்தரங்கை காவல்துறை தடை விதித்த காரணத்தால் கழக தலைவர் “ஶ்ரீமத் சடகோவ இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு” என்ற தலைப்பில் ஆன்மீக உபன்யாசம் செய்ய திட்டமிட்டார்
அதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட திவிக “சோடா பாட்டில் புகழ்” ஜீயரின் அருள்வாக்கை கேட்க புனித யாத்திரையை அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்பினர்
வண்டியில் யாத்திரையின் நோக்கத்தை குறிக்கும் வகையில் பேனர் கட்டி, பெரியார் பிஞ்சுகள் நாமம், செந்தூரம் இட்டு கையில் ஜீயரின் வன்முறை பேச்சை குறிக்கும் வகையில் காவி நிற முக்கோண கொடியில் சோடா பாட்டில் ஜீயர் பெயரோடு கொடியில் அச்சிட்டு யாத்திரை கிளம்பினர்
ஆண்டாளின் பக்தர்களாக கொளத்தூரில் முன்வரிசையில் அமர்ந்து வேத உபன்யாசங்களையும் ஆன்மீக சொற்பொழிவையும் கண்டு கேட்டு ஆண்டாளின் திருவருளை பெற்றனர்
நிகழ்வில் மதியம் கோமாதா பிரியாணி பூஜை செய்து உண்டு மகிழ்வுடன் ஊர் திரும்பினர்

IMG_3033

You may also like...