கடும் சரிவில் இந்திய பொருளாதாரம்: முதலீட்டாளர்கள் ஓட்டம்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்றாண்டு களில் இல்லாத அளவிற்கு, 5.7 சதவிகிதம் என்று வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து  6ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பங்குச் சந்தை முதலீட்டா ளர்களின் டாலர் முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஓடுவதும், இறக்குமதி அதிகரிப்பு காரணமாக இந்திய சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் டாலர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் வெறும் 5.7 சதவிகிதம் என்ற அளவிற்கு, 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான இடத்திற்கு சென்றது. இது இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய பதற்றமே, அவர்கள் தங்களின் முதலீடுகளை அவசர அவசரமாக திரும்பப் பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.

புதிய முதலீடுகள் வராத நிலையில், ஏற்கெனவே வந்த முதலீட்டையும் காப்பாற் றிக் கொள்வதற்காக சில வித்தைகளை செய்வதென மோடி – ஜெட்லி கூட்டணி இறங்கியுள்ளது. ஆனால், எதுவும் பொருளாதார நெருக்கடியி லிருந்து நாட்டை காப்பாற்றுவதாக இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்காக மத்திய அரசு சுமார் 50,000 கோடி ரூபாயை கூடுதலாகச் செலவிட முடிவு செய்துள்ளது; இந்தக் கூடுதல் செலவீட்டின் மூலம் பொருளாதாரச் சரிவைக் குறைக்க முடியும் என மோடி அரசு கணக்கு போட் டுள்ளது. ஆனால், இந்தக் கூடுதல் செலவீட்டு திட்டத்தின் மூலம் இந்திய அரசுக்கு மேலும் அதிகளவிலான நிதிப்பற்றாக்குறைதானே ஏற்படும் என்று எண்ணும் முதலீட்டாளர்கள், இந்திய சந்தையில் செய்துள்ள முதலீட்டை திரும்ப எடுப்பதில்தான் அவசரம் காட்டு கிறார்கள். அதுமட்டுமல்லாமல், புதிய முதலீட்டு அளவுகளையும் குறைத்து வரு கின்றனர்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை யும், நிலைமை சரியில்லை என்பதையே முத லீட்டாளர்களுக்கு செய்தியாக கூறியுள்ளது. 50,000 கோடி ரூபாய் மட்டுமே நிதிப் பற்றாக்குறை பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜூன் காலாண்டிற்கு உள்ளேயே இந்திய இறக்குமதியின் அளவு 41.2 பில்லியன் டாலராக அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கி போட்டு உடைத்துள்ளது. இப்படி அடுத்தடுத்து, நம்பிக்கையற்ற அறிவிப்புக்களே வருவதால், சுதாரித்துக் கொண்ட பன்னாட்டு முதலீட்டாளர்கள், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். ஜிஎஸ்டி வசூல் ரூ. 5000 கோடி குறைந்தது சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. விற்பனை வரி, நுழைவு வரி, சுங்க வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக ஒரு முனை வரியான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதாக மோடி அரசு கூறியது. முதல் மாதத்திலேயே 95,000 கோடி வரி வசூல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டியில் பதிவு செய்தவர்களில் 74 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 38 லட்சம் தொழில் நிறு வனங்களும் வர்த்தகர்களும் தங்களின் ஜூலை மாதத்திய ஜிஎஸ்டி வரியை ஜிஎஸ்டியின் இணைய தளத்தின் வாயிலாக செலுத்தினர். முதல் (ஜூலை) மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலானது, உத்தேசமாக 95,000 கோடி ரூபாயாக இருந்தது. இது மோடி அரசை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சுமார் 14,402 கோடி ரூபாய் மத்திய வரியாகவும்  மாநில வரியாக சுமார் 21,067 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த வரி சுமார் 47,377 கோடி ரூபாயும், சொகுசு பொருள்களின் மீது வசூலிக்கப்படும் வரி வருவாய் சுமார் 7,823 கோடி ரூபாயும் இருந்தது.

ஆனால், ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 90,669 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது. இதுவும் மோடி அரசை அதிர்ச் சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதையொட்டி, ஜிஎஸ்டியின் ஆணையமானது, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை உள்ளீட்டு வரிப்பயன்பாடாக எடுத்துக் கொண்ட 162 தொழில் நிறுவனங்களு க்கும் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பி சமாளித்தல் வேலையில் இறங்கியுள்ளது. பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை மட்டும் இரண்டு மடங்கானது. நாட்டின் வளர்ச்சியும், பொருளாதாரமும் தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருந்தாலும், இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. அது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 2016- ஆம் ஆண்டில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 339 பேர்களாக இருந்தது. அதுவே இந்தாண்டு 617 பேர்களாக அதிகரித் துள்ளது.

சீன நாட்டைச் சேர்ந்த ஹூரன் என்ற நிறுவனம் இத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய பணக்காரர்கள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஹூரன் நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது

6ஆவது ஆண்டாக, இந்திய பெரும் பணக்காரர் களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது. 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே இந்த ஆண் டிற்கான ஆய்வில் ஹூரன் சேர்த்துள்ளது. இதில் எப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 302 பேர் புதிதாக பணக்காரர்கள் பட்டியலில் இணைந் துள்ளனர். அதாவது, கடந்த ஓராண்டில் புதிதாக 302 இந்தியர்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டியுள்ளது.

இந்திய பெரும்பணக்காரர்களில் எப் போதும் போல, மோடியின் நண்பர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். நடப்பாண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் 58 சதவிகிதம்வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 900 கோடியாக ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தாண்டு பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் பார்மா துறையில் இருந்து 79 பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர். பெரும் பணக் காரர்கள் 617 பேர்களில், 182 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 117 பேர் டில்லியையும், 51 பேர் பெங்களூருவையும் சேர்ந்தவர்களாவர்.

சென்னையைச் சேர்ந்த 15 பேரும் பட்டிய லில் இடம்பிடித்துள்ளனர். 2017-ஆம் ஆண் டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டை விட சுமார் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்த தற்கு தவறான ஆலோசகர்களும் தவறான வழி காட்டுதலால் ஆன சீர்த்திருத் தங்களுமே காரணம் என்று ஆர்எஸ்எஸ்-சின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங் சாடியுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு ஏற்கெனவே நம் சிறிய மற்றும் மிகச் சிறிய தொழில்களை பாதித்துவிட்டது. சில்லரை விற்பனைத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று பிஎம்எஸ் கூறியுள்ளது.

இதனிடையே, பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில், உலகளவில் இந்தியா ஓரிடம் கீழிறங்கி 40- ஆவது இடத்திற்கு தள்ளப்பட் டுள்ளது. உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், மொத்தமுள்ள 137 பொருளாதார நாடுகளில், சென்ற ஆண்டு இந்தியா 39-ஆவது நாடாக இருந்தது. இந்த முறை ஓரிடம் பின்தங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.                                            ட

நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்

You may also like...