அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுத பூஜை கொண்டாடுவதைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.வி.க. கண்டன ஆர்ப்பாட்டம் 26.09.2017 புதன் மாலை 5 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தோழர்களை  கைது செய்து சத்திரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில்  15 தோழர்கள் கலந்துகொண்டனர்.

கைதான தோழர்கள் : ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), சண்முகப்பிரியன் (மாவட்ட செயலாளர்), குமார் (மாவட்ட அமைப்பாளர்), திருமுருகன் (மாநகரத் தலைவர்), சத்தியராஜ் சித்தோடு, கிருஷ்ணன் ரங்கம்பாளையம், எழிலன் சித்தோடு.

பெரியார் முழக்கம் 05102017 இதழ்

You may also like...