கழக சார்பில் போராளி இமானுவேல் சேகரின் நினைவு நாள் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதி சார்பாக, ஜாதி ஒழிப்பு போராளி  இமானுவேல் சேகரின் நினைவு நாள் பெரியாரின் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் ஜா.உமாபதி தலைமையில் 11.09.2017 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தோழர்கள் நாத்திகன் மற்றும் கீர்த்தி ஜாதி ஒழிப்பு பாடல் களையும், பகுத்தறிவு பாடல்களையும் பாடினர்.

இமானுவேல் சேகரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், அவரது படுகொலை குறித்தும்  இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்),  வழக்கறிஞர் துரை அருண் (சென்னை உயர்நீதிமன்றம்) மற்றும் அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்) சிறப்புரை யாற்றினார்கள். சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவுச் செய்தார்.

பெரியார் முழக்கம் 21092017 இதழ்

You may also like...