ஜேஎன்யூ மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி நிகழ்வு சேலம் 16032017

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செய்லாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், நேற்று மாலை 6-30 மணிக்குடெல்லி ஜவகர்லால் நேரு பலகலைக் கழகத்தில் தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் அவர்களும் அவரது குழுவினருடன் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ஆய்வு மாணவர்  சேலம் முத்துகிருட்டிணனன் உடல் இன்று ( 16-3-2017 )  காலை 6-00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட செய்லாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8-00 மணிக்கே மாணவர் முத்துகிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்.
மதுரை எவிடென்ஸ் கதிர், மக்கள் கண்காணிப்பகம் ஆசீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, காங்கிரசு தலைவர் தங்க பாலு, திமுக மாவட்டசெய்லாளர்கள் வீரபாண்டி ராஜா, சிவலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு தோழர்கள் காஞ்சி மக்கள் மன்றம் கீதா மற்றும் தோழர்கள், பகுஜன் சமாஜ் கட்சி செய்லாளர் வழக்குரைஞர் பார்த்திபன், தலித் விடுதலைக் கட்சித் தலைவர் செங்கோட்டையன், பொதுநல மாணவர் இயக்கத் தோழர்லகள் வளர்மதி மற்றும் தோழர்கள், வழக்குரைஞர் தமயந்தி, கவின் மலர், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக பா.ஜ.க.வின் மத்திய துணை அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் வந்தபோது கடும் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அவர்மீது தனது இரண்டு காலணிகளையும் வீசியதாக சாலமன் என்ற தோழர் காவல்துறையால் அப்புறப்படுத்தப் பட்டார். கடும் கொந்தளிப்பைக் கண்ட காவல்துறையினர் அமைச்சரின் கார் அங்கேயே இருக்க, அவரை மட்டும் பாதுகாப்பாக அழைத்துசென்று பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர்.
இறுதி ஊர்வலம் நண்பகல் 1-00 அளவில் புறப்பட்டு சேலம் செவ்வாய்ப்பேட்டை இடுகாட்டில் 3-00 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கம் முடிந்ததும் அனைத்து அமைப்புகளின் சார்பாக எவிடென்ஸ் கதிர், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகிய இருவர் மட்டும் இரங்கலுரை ஆற்றிய பின்னர் அனைவரும் கலைந்தனர்.
img_2477 img_2484 img_2485 img_2487 img_2503 img_2504 img_4330 img_4332 img_4334

You may also like...