பரம்பரை இழிவுக்கு நிரந்தர ஆதரவு!

“தமிழ்நாட்டில் பல காலமாக சமஸ்கிருதம் என்கின்ற ஒரு வடமொழியை ஆரியர் இந்நாட்டில் புகுத்தி அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுத் தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும். பயன்படும் என்று காட்டி நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும்; சுரண்ட முடியும்; நம்மை கீழ்சாதி மக்களாக ஆக்க முடியும். அவன் ‘பிராமணனாக’ இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதை யோடும் விழிப்போடும் காரியம் செய்து வருகிறார்கள்.”                – பெரியார் ‘விடுதலை’ (15.2.60)

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...