”இன்றைக்கும் தேவை பெரியார்” விளக்கப் பொதுக்கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 15.11.2015.மாலை 5.00 க்கு விழுப்புரம் மாவட்டம்.திருவெண்ணெய் நல்லூர்,மணக்குப்பம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பெரியார் மாணவர் பேரவையைச் சேர்ந்த தோழர் ஆனந்த் பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார்.

தோழர் கணேஷ் ராஜா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
மணிகண்டன்,பழனி,புஷ்பராஜ்,ஆறுமுகம்,பாலகுரு,நாராயணன்,கார்த்தி,பாபு,சக்திவேல்,ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தோழர் காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்சியுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவு கருத்துக்களுடன் தோழர் காவை இளவரசன் அவர்களின் நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி,வழக்கறிஞர் துரை அருண்,கழக தலைமை செயற்குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார்,கழக தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினார்கள்

நிறைவாக கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் ”இன்றைக்கும் தேவை பெரியார்” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

மேலும் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் பெரியார் வெங்கட்,மாவட்ட அமைப்பாளர் நவாப்பிள்ளை, கடலூர் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்,கழக தோழர் சாக்ரடீஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பழனிச்சாமி,ஆசிரியர் கேசவன் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் பொதுமக்களும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தோழர் கற்பகம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இக்கூட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பெரியார் மாணவர் பேரவை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கூட்ட ஏற்பாடுகளை கழக தோழர் முழக்கம் உமாபதி,தோழர் செந்தில் fdl மற்றும் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

20151115212832 20151115212833 (1) 20151115212833 20151115212834 20151115212835 20151115212847 20151115212848 20151115212900

You may also like...