யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்தது கழகத்தின் போராட்டம் வெற்றி
கடந்த சூன் மாதம் 24 தேதியன்று சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள தொட்டிபாளையம் இரயில் தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்நிலையில் கோகுல்ராஜுடன் கல்லூரியில் படித்த சுவாதி என்ற இளம்பெண்ணும், கோகுல்ராஜின் தாயாரும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். அதை தொடர்ந்து கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக அது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கோகுல்ராஜும், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று காலையில் இருவரும் திருச் செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலைக்கோயிலுக்கு சென் றுள்ளனர். அவர்கள் வழி பாடெல்லாம் முடித்துவிட்டு கோயிலைவிட்டு வெளியேறும் போது தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் அவர்கள் இருவரையும் அழைத்து மிரட்டி சுவாதியை கீழே அனுப்பிவிட்டு கோகுல்ராஜை...