Author: admin

காங்கிரசுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது

காங்கிரசுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது

தோழர் எம்.என்.ராய் காங்கிரசில் பிரதான புருஷர். மிகுந்த தீவிரவாதி. பதவி ஏற்கக்கூடாது என்பவர். காங்கிரஸ் பதவி ஏற்புக்காரர் சூழ்ச்சி பலிக்காமல் போனவுடன் காங்கிரசில் பிளவு ஏற்படுவது நிச்சயமென்று ஏற்பட்டவுடன் காங்கிரஸ் முதலாளி கூட்டத்தார் காங்கிரஸ் சமதர்மக்கட்சியை விலக்க முயற்சி செய்து விட்டார்கள். அதாவது காங்கிரஸ் சமதர்ம வாதிகளின் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான தோழர் ஜவஹர்லால் அவர்கள் ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும் என்றும் பிரிட்டன் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவை காலிசெய்து விட்டு கப்பலேற வேண்டும் என்றும் ஒரு புறம் பல்லவி பாடிக்கொண்டு இருக்கும்போதே மற்றொரு புறம் தோழர் காந்தி பளீரென்று ஜவஹர்லால் கன்னத்தில் அறைந்து பல்லுகளை உதிர்த்தினாற்போல் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு கடுகளவு மனஸ்தாபமோ அதிருப்தியோ நேருவதாய் இருந்தால் என் உயிரை விட்டு அதை தடுப்பேன் என்று சொல்லி எப்படியாவது தனது சீஷர்களுக்குப் பதவி வாங்கிக் கொடுக்கவும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஜெட்லெண்ட் பிரபுவை வாக்குறுதி கேட்கிறார்.. ஜெட்லண்ட் பிரபுவோ இதற்கெல்லாம் சிறிது...

திலகர் நிதி மோசடியும்  பொது மக்களும்

திலகர் நிதி மோசடியும் பொது மக்களும்

  – “ஜஸ்டிஸ்” எழுதுவது “திலகர் சுயராஜ்ய நிதி தவறாக நிர்வாகிக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் அதனால் ஏற்பட்ட நஷ்டம் காங்கிரசுக்கே தவிர அந்நிதிக்கு பொருளுதவி செய்யாதவர்களுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை” என தோழர் சி. ராஜகோபாலாச்சாரி சொன்ன கூற்றை சற்று இங்கு ஆராய்வோம். இக்கூற்றில் மூன்று வகையாக குறிப்புகள் தொக்கி நிற்கின்றன. அதாவது ஒன்று காங்கிரஸ் திலகர் நிதியை தப்பாக நிர்வாகம் செய்ததாகச் சொல்லப் படுவது உண்மையல்ல. இரண்டு இந்நிதிக்கு பணம் கொடுத்தவர்களுக்குத்தான் அதைப்பற்றி குற்றங்குறைகள் எடுத்துரைக்க உரிமையுண்டு. மூன்று அதைப்பற்றி லாபமோ நஷ்டமோ காங்கிரசுக்கேயொழிய வெளியிலுள்ளவர் களுக்கு ஒன்றுமில்லை என்பவைகளாகும். இவ்வாறு இவர் கூறியதைப்பார்த்தால் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் வெளியிட்ட அறிக்கைக்கும் ஆச்சாரியாருடைய கூற்றுக்கும் நெருங்கிய சம்பந்தமிருக்கிறது என்பது நன்கு தெரியவரும். அவ்வறிக்கையில் காங்கிரஸ் தலைவர் கூறுவதாவது, பழமையானதும், வெகுநாட்களானதும் தணிக்கை செய்யப்பட்டதும், பழைய சாசனங்களோடு ஒதுக்கிவைக்கப்பட்டதுமான ஒரு விஷயத்தைக் குறித்து திடீரென்று புதிதாக...

பதவிமோகம் காங்கிரசுக்காரருக்கா? அல்லாதாருக்கா?

பதவிமோகம் காங்கிரசுக்காரருக்கா? அல்லாதாருக்கா?

சாப்ராவில் சாரான் அரசியல் தொண்டர்கள் மகாநாடு கூடியது. அதில் தோழர் அனுக்கிரகநாராயண் சின்னா தலைமை வகித்தார். ஆனால் அம்மகாநாட்டிற்கு தலைமை வகிக்க தோழர் ஜகத்நாராயணலால் ஒத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத அசெளகரியத்தால் அவர் வரமுடியவில்லை. அவர் அம்மகாநாட்டிற்கு ஒரு சேதியனுப்பியிருந்தார். அதில் காங்கிரஸ் தொண்டர்கள் எப்பொழுதும் தயாராயிருக்கவேண்டும் என்றும் அவர்களது சேவை தேவையான போதெல்லாம் உடனே முன்வரவேண்டுமென்றும் ஏமாற்றிவிடக்கூடாது. டிமிக்கி கொடுத்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்டார். இதனால் காங்கிரசில் இதுவரை கலந்து வேலை செய்து வருபவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பது விளங்கவில்லையா? இம்மகாநாட்டிற்கு தலைமைவகித்த தோழர் அனுக்கிரக நாராயண் சின்னா தனது தலைமைப் பிரசாங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் செய்த இச்சிறிய – அற்ப காரியத்தைக் குறித்து மனம் பூரித்து விடக்கூடாது! கர்வங்கொண்டு தலைகால் தெரியாமல் மதுவுண்டவனைப்போல இருந்து விடக்கூடாது என்றும், சுதந்திரப்போராட்டத்தின் முதற்படியாகிய எ.பி.சி. என்ற அட்சரத்தைக்கூட இன்னும் சரிவர அவர்கள் அறியவில்லை என்றும் ரஷ்யாவில் சுதந்திரத்திற்காக அந்நாட்டு வீரர்கள் எத்தகைய வீரச் செயல்கள்...

ஈரோடு சந்தைப்பேட்டை விபத்து  விசாரணைக் கமிட்டி முடிவு எங்கே?  பார்ப்பன சூழ்ச்சியில் ஏமாந்து விடாதீர்கள்

ஈரோடு சந்தைப்பேட்டை விபத்து விசாரணைக் கமிட்டி முடிவு எங்கே? பார்ப்பன சூழ்ச்சியில் ஏமாந்து விடாதீர்கள்

  – ஓட்டாண்டி வந்துவிட்டது! வந்துவிட்டது!! என்ன? என்ன?? அதுதான் கமிட்டியின் முடிவு! எங்கே? அதோ! இதோ!! என்ன கயிறு என்கிறீர்களா? அப்படி ஒன்றுமில்லை, எல்லாம் பச்சை உண்மை. உங்கள் மனதில் அது படாவிட்டால் நான் ஜவாப்தாரி அல்ல. கோபிக்க வேண்டாம். சமாசாரத்தைச் சொல்லி விடுகிறேன். ஈரோடு சந்தைப்பேட்டை விபத்தைப்பற்றி விசாரிக்க இரண்டு கமிட்டி இங்கே நியமிக்கப்பட்டதல்லவா? பணம் சேகரிக்கப் பார்ப்பனரல்லாதாரடங்கிய கமிட்டியும் காரணத்தை விசாரிக்கப் பார்ப்பனர் அடங்கிய கமிட்டியும் கற்பித்தார்கள் அல்லவா? எங்கே அவர்களின் முடிவு என்று கேட்கிறீர்களா? அதுதான் வந்து விட்டது. எங்கே இன்னும் வெளியில் காணோமே என்கிறீர்களா? இது பயித்தியகார உலகம். நீங்களும் அதில் தானே குடி இருக்கிறீர்கள். அதனாலேதான் உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு தெரிந்ததைச் சொல்லிவிடுகிறேன். விபத்திற்கு ஆளானவர்களுக்கு உதவிசெய்வது என்பது இரண்டாம் பக்ஷம். முதலாவது என்ன என்று தெரியுமா? அதுதான் அடுத்து வரும் தேர்தல் போட்டி. எப்படி என்றால் கமிட்டிகளின் முடிவை இப்பொழுதே சொல்லிவிட்டால்...

சேர்மாதேவி குருகுலம்

சேர்மாதேவி குருகுலம்

காலஞ்சென்ற வ.வெ.சு. அய்யரால் ஸ்தாபிக்கப்பட்ட சேரமாதேவி ஆச்சிரமம் இம்மாதம் 7-ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள பல பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஆச்சிரமத்தை நடத்தும் “பெரிய” பொறுப்பை, சென்னை கோகுல ஹரிஜன காலனி ஸ்தாபகரான பத்தமடை பி.என். சங்கரநாராயணய்யர் பலர் வேண்டுகோளின்படி ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். ஆனால் ஆச்சிரமப் புனருத்தாரண வேலை, சபை திக்குக் குட்டும்போதே கண்ணில் குட்டிக்கொண்ட மாதிரியே ஆரம்பமாகியிருக்கிறது. 1934 முதல் நாளிதுவரை ஆசிரமத்தில் நடந்த வேலைகளைப்பற்றி யாரோ ஒரு எல்.என். கோபால்சாமி ஒரு அறிக்கையைப் படித்தாராம். அப்பால் ஆச்சிரமம் நடத்துவதைப்பற்றி ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாம். தோழர்கள் சாவடி கூத்த நயினார் பிள்ளையும் தூத்துக்குடி ராமசாமியும் பேசுகையில், “வெளியில் பல பேர்களின் அபிப்பிராயத்தில் இந்த ஆச்சிரமத்தில் முன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் வராவண்ணம் தடுக்க, தனி நிலைமையில் ஒருவரிடம் ஒப்புவிப்பதைவிட சிலரைச் சேர்த்தே நிர்வாகம் நடத்தச் சொல்வது சிலாக்கிய”மென்றும் மேலும் “ஆச்சிரமத்துக்குத் தலைமை வகிக்க ஒரு பிராமணரல்லாதார் இருந்தால்...

காந்தியார் இறக்கம்

காந்தியார் இறக்கம்

“உச்சாணிக்” கொம்பிலே ஏறி உட்கார்ந்து கொண்டிருந்த காந்தியார் படிப்படியாக இறங்கி இப்பொழுது தரை மட்டத்துக்கு வந்து விட்டார். விசேஷாதிகாரங்களை உபயோகிப்பதில்லையென்று எழுத்து மூலம் கவர்னர்கள் வாக்குறுதியளிக்க வேண்டுமென்று அவர் வகுத்த முதல் நிபந்தனை கருவிலேயே அழிந்து போயிற்று. அப்பால் கவர்னர் விசேஷாதிகாரங்களைப் பிரயோகம் செய்யமாட்டார் என்று காங்கரஸ் கட்சித்தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் போதுமென்று காந்தி நிபந்தனை மாற்றமடைந்தது. கவர்னர்கள் அதையும் லôயம் செய்யவில்லை. மூன்றாவதாக வாக்குறுதிப் பிரச்சினையை பஞ்சாயத்தார் முடிவுக்கு விடவேண்டுமென்று காந்தியார் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதையும் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உடனே அவருக்குச் சிறிது அலுப்புத் தட்டிற்று. “விசேஷ நிபந்தனை எதுவும் வேண்டாம். மந்திரிமாருக்கும் கவர்னர்களுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டால் கவர்னர்கள் மந்திரிமாரை “டிஸ்மிஸ்” செய்து விடட்டும்” என்றார். அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. கடைசியாக அவர் சோர்வடைந்து “டிஸ்மிஸ் செய்யவேண்டாம். ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று மந்திரிமாரைக் கேட்டுக்கொண்டால் போதும்” என தமது நிபந்தனையைக் கரைத்துக்கொண்டு விட்டார். அம்மட்டோ...

காங்கரஸ் கட்டுப்பாடு

காங்கரஸ் கட்டுப்பாடு

சென்னை மாகாணத்தில் இரண்டு நகரசபைகளிலும் ஒரு கார்ப்பரேஷனிலும் ஏழு ஜில்லா போர்டுகளிலும் காங்கரஸ்காரர் மெஜாரிட்டி கட்சியாக இருக்கிறார்களாம். ஆனால் காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற அந்த ஸ்தல ஸ்தாபனங்கள் எல்லாம் கழுதை புரண்ட களமாகவே இருந்து வருகின்றன. தகராறு, பிளவு, சச்சரவில்லாத ஸ்தல ஸ்தாபனமே இல்லை. வேலூர், திருச்சி, திருநெல்வேலி, தென்னாற்காடு கதை பழங்கதையாகிவிட்டது. கர்னூல் ஜில்லா போர்டில் காங்கரஸ்காரர் ஆதிக்கம் பெற்றிருந்தும் இடைக்கால மந்திரிகளைக் கண்டித்து காங்கரஸ்வாதி கொண்டுவந்த தீர்மானம் முழுத் தோல்வியடைந்தது. காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற நெல்லூர் ஜில்லாபோர்டிலே “பட்ஜெட்” நிறைவேறும் காரியம் திண்டாட்டத்திலிருக்கிறது. திருவண்ணாமலை ஜில்லா போர்டு விஷயம் சொல்ல வேண்டியதில்லை, ஜில்லா போர்டு தலைவர் தோழர் எம். ஷண்முக முதலியார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே தீர்மானித்திருந்தும் இன்னும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேயில்லை ஏன்? ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் காங்கரஸ் சாயம் வெளுத்துவிடும். இந்நிலைமையில் சென்னை சட்டசபை மெம்பரும் திருவண்ணாமலை ஜில்லா...

தேச விடுதலைக்கு வழி?

தேச விடுதலைக்கு வழி?

லண்டன் பொதுக் கூட்டம் ஒன்றில் காலஞ்சென்ற லாலாலஜபதி ராய் பேசியபோது, “நாங்கள் 50 வருஷகாலமாய் சுதந்தரத்துக்காகப் போராடுகிறோம். எனினும் பிரிட்டிஷார் எங்களுக்கு சுதந்தரமளிக்கவில்லை” என்று குறிப்பிட்டார். உடனே “கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து, “இந்தியாவின் ஜனத்தொகை என்ன?” என்று கேட்டார். “30 கோடி” என்றார் லாலா லஜபதி. “30 கோடிப் பேர் சுதந்தரப் போர் நடத்தியும் இன்னும் நீங்கள் ஏன் வெற்றிபெறவில்லை?” என்று அவர் கேட்டார். லஜபதிராய்க்கு பதிலளிக்க முடியவில்லை. வாஸ்தவத்தில் இந்தியர்கள் எல்லாம் ஏகோபித்து, சுதந்தரம் வேண்டும் என்றால் பிரிட்டிஷார் அன்றே கொடுத்துவிடுவார்கள். இந்தியர்களுக்குள்ளே ஒற்றுமையில்லாமலிருப்பதுதான் தற்காலக் குழப்பங்களுக்குக் காரணம். தற்காலம் நடப்பதாய்க் கூறப்படுவது சுதந்தரப்போரல்ல. பார்ப்பனரல்லாதாரையும் கையாலாகாத ஏழை எளியோரையும் எந்நாளும் அடிமைப்படுத்தி வைப்பதற்கான சூழ்ச்சிப்போரே இன்று நடைபெற்று வருகிறது. இந்தியாவிலே பல ஜாதி, பல மதங்கள் தோன்றி ஒற்றுமை இல்லாமலாய் விட்டது. ஜாதி மத பேதங்கள் ஒழிந்து இந்தியா உண்மையில் ஒரு “நேஷன்” ஆனால் தான் இந்தியா விடுதலையடையும்....

“விடுதலை” காலணா தினசரி

“விடுதலை” காலணா தினசரி

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சார்பாக சென்னையில் வாரம் இரு முறையாக நடந்துவந்த தமிழ் “விடுதலை” பத்திரிக்கையானது ஈரோட்டில் இருந்து தினசரி பத்திரிக்கையாக நடந்து வர சகல ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசாங்க அனுமதி ஒரு வாரத்திற்குள் கிடைத்து விடும். அனேகமாய் இம்மாதம் 3 வது வாரத்தில் பத்திரிக்கையை வெளியாக்க தீவிர முயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏஜண்டுகளாய் இருக்க விருப்பமுள்ளவர்கள் உடனே தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 35 பத்திரிக்கைகளுக்கு குறைவாக ரயில்வே பார்சலில் அனுப்பப்படமாட்டாது. 3 மாதகாலத்துக்கு கம்மி இல்லாமல் பத்திரிக்கை ஒன்றுக்கு ஒரு பை. கமிஷன் கொடுக்கப்படும். தினம் 50 பத்திரிக்கைகள் வரை தருவிப்பவர்கள் 25 ரூபாய் டிப்பாசிட் கட்ட வேண்டும். ~subhead சந்தா விபரம்:- ~shend தபால் மூலம் தெரிவித்துக் கொள்ளுபவர்களுக்கு முன் பணமாக மாதம் ஒன்றுக்கு சந்தா 0-11-0 6 மாதத்திற்கு 4-0-0 ஒரு வருஷத்துக்கு 7-8-0 ஏஜண்டுகள் உள்ள இடத்தில் சந்தாதாரர்களாய் சேர விரும்புகின்றவர்களுக்கு முன் பணமாக...

நான் காங்கிரசில் இருந்தால்  என்ன ஆகிவிடும்?

நான் காங்கிரசில் இருந்தால் என்ன ஆகிவிடும்?

    செருப்பு ஆண்ட நாடு இது! காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் சொத்தே பார்ப்பனரல்லாத தியாகிகள் எங்கே தோழர்களே! தோழர் விஸ்வநாதம் அவர்கள் பேசியதைக் கேட்டீர்கள். அது விஷயமாகவே நானும் பேசவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். அரசியல், சமூக இயல், சுயமரியாதை இயல் என்பவை எல்லாம் ஒன்றே ஒழிய இவை தனித்தனியாக பிரிக்கக்கூடியதல்ல. இவை ஒன்றை விட்டு ஒன்று தனித்து நிற்க கூடியதுமல்ல. சமூகத்துக்கு ஆகத்தான் அரசியலும் சுயமரியாதை இயலும் இருந்து வருகிறது. சமூகத்தை நீக்கி விட்டால் மற்ற இரண்டுக்கும் வேலையே இல்லை. சமூகத்தின் தேவைக்கு ஆகத்தான் அரசியல் ஏற்பட்டதே ஒழிய சமூக சம்பந்தமில்லாவிட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும் சமூக இயலையும் பிரித்துக்காட்டுவதானது சமூக குறைபாடுகளை – சமுதாயக் கொடுமைகளை பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர் களுடைய சூழ்ச்சியேயாகும். நமது நாட்டில்தான் அரசியலும் சமுதாய இயலும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத மாதிரியில் பிரிக்கப்பட்டும் பிரிவினையாகப் பேசப்பட்டும் வருகிறது. உதாரணமாக நம் நாட்டில்...

காங்கிரஸ் ஆட்சியின் பயன்

காங்கிரஸ் ஆட்சியின் பயன்

காங்கிரஸ்காரர்கள் பாமர மக்களை ஆசைகள் காட்டி ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். அசாத்தியமான காரியங்களையெல்லாம் சாதித்து விடுவதாகக் கூறியவைகளை பாமர மக்கள் நம்பிவிட்டார்கள். பாமர மக்களுக்கு போதிய அரசியல் ஞானம் இல்லாததால் எது சாத்தியம் எது அசாத்தியம் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. ஆனபோதிலும் காங்கிரஸ்காரர்கள் சிற்சில ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று இன்றைக்கு 2, 3 வருஷங்களாகிவிட்டன. ஒரு சிலவற்றிற்கு முழு காலாவதியும் ஆகிவிட்டன. ஆகவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்த அந்தந்த ஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன? மக்கள் அடைந்த நலன் என்ன? முன்பு இருந்துவந்த நிலைக்கு இப்போது ஏற்பட்ட மாறுதல் என்ன? என்று ஒரு (பாலன்ஸ் ஷீட்) வரவு செலவு ஒரட்டு டாப்பு போட்டு பார்த்தால் பாமரமக்களுக்கு இனியாவது உண்மை விளங்கும் என்று கருதி சிலவற்றை வெளியாக்குகிறோம். தமிழ்நாட்டு ஸ்தல ஸ்தாபனங்களில் மிக பெரிய ஸ்தாபனம் மதுரை முனிசிபாலிட்டியாகும். இது இந்த மூன்று வருஷகாலமாக பலமான...

இப்பொழுதாவது புரிகிறதா

இப்பொழுதாவது புரிகிறதா

பார்ப்பன மகாநாட்டுக்கு அனுமார் கொடி தென்னாட்டு பார்ப்பனர்களால் 24-5-37-ந் தேதி கும்பகோணத்தில் கூட்டப்பட்ட பார்ப்பன ஜாதி மகாநாட்டில் அனுமார் கொடி பறக்க விட்டதாக 25-ந் தேதி “இந்து” பத்திரிகையில் மகாநாட்டு நடவடிக்கை என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்கள் காங்கிரஸ் தேர்தல்களிலும் காங்கிரஸ் சுவரொட்டி விளம்பரங்களிலும் காங்கிரஸ் துண்டு பிரசுரங்களிலும் அனுமார் – குரங்கு உருவத்தை எதற்கு ஆக பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதும் பார்ப்பனரல்லாதார் தொண்டர்களுக்கு எதற்கு ஆக அனுமார் படையென்று பெயர் கொடுத்தார்கள் என்பதும் இப்போதாவது தெரிந்ததா என்று பார்ப்பனரல்லாதாரில் மானமும் மனிதத் தன்மையும் உள்ள தோழர்களைக் கேட்கின்றோம். இந்தக் கேள்வியானது வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்விற்கும் வழி செய்து கொள்ள காங்கிரசில் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாய் திரிபவர்களையும் திரியவேண்டிய அவசியத்திலுள்ளவர்களையும் நாம் கேட்கவில்லை. உண்மையில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என்றும் சுயமரியாதையுள்ள மக்கள் என்றும் சுதந்தர புருஷர்கள் என்றும் கருதிக் கொண்டிருப்பவர்களையே கேட்கின்றோம். பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாத சமூகத்துக்கும் எப்போதாவது போர் தொடங்கப்பட்டு...

பார்ப்பன மகாநாடுகள்

பார்ப்பன மகாநாடுகள்

சமீப சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்கள் தங்கள் முயற்சியை கடசி தடவையாகக் கருதி எல்லா பார்ப்பனர்களும் ஜாதி காரணமாக ஒன்று சேர்ந்து ஒரே மூச்சாகப் பாடுபட்டு அவர்களது ஆதிக்கத்துக்கு மாறாக உள்ள எல்லாவித முயற்சிகளையும் எல்லா கòகளையும் அடியோடு ஒழிக்க தங்களாலானவரை பார்த்தார்கள். ஆனால் (மாயமானைக் கொன்ற கதைபோல்) மாயவெற்றியைத்தான் அவர்களால் அடைய முடிந்ததே தவிர காரியத்தில் – அவர்களது உள் எண்ணத்தில் அவர்கள் எதிர் பார்த்ததில் ஒரு சிறிதும் இதுவரையில் வெற்றி பெற முடியாமலே போய் விட்டது. 1920, 21-ம் வருஷங்களில் இதே பார்ப்பனர்கள் காந்தியாரின் நிழலில் நின்று கொண்டு “இந்த அரசாங்கம் சைத்தான் அரசாங்கம், அரசாங்கப்படிப்பு உத்தியோகம் பிரதிநிதித்துவ சபை நீதி ஸ்தலங்கள் ஆகியவை பிரதிநிதித்துவ மற்றவை, பொய் அரசாங்கம் நடைபெறுகிறது. ஆதலால் இதை அழிக்க வேண்டும். ஆதலால் இவற்றை பஹிஷ்கரிக்க வேண்டும்” என்றெல்லாம் கத்திக் கொண்டு திரிந்து காலத்தைக் கடத்தி மக்களை ஏமாற்றியதில் யாதொரு பயனும் அடையாமல் படுதோல்வி...

மன்னர் முடிசூட்டு விழா

மன்னர் முடிசூட்டு விழா

காங்கிரஸ்காரர்கள் இந்திய மக்கள் மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வது தேசாபிமானத்துக்கு விரோதமானதென்று கூறி இந்திய மக்கள் எவரும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி யிருந்தும் தமிழ் நாட்டில் ஏறக்குறைய ஒவ்வொரு நகரங்களிலும் முடிசூட்டு விழாக்கள் விமரிசையாகவே நடந்திருப்பதாகச் சேதிகள் கிடைத்திருக்கின்றன. பல இடங்களில் காங்கிரஸ் மெம்பர்களும் கலந்து நடத்தியிருப்பதாகவும் சேதி வந்திருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் மன்னரைப்பற்றி யாதொரு குறையும் கூறுவதில்லை. மன்னருக்கும் மன்னர் அரசாங்கத்திற்கும் அரசியல் சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பதாக பிரமாணம் செய்வதிலும் தவறுவதில்லை. பலர் முடிசூட்டில் கலந்து கொண்டதிலும் குறைவில்லை. ஆனால் தங்களைத் தவிர மற்றவர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைப் பவர்களாம் தேச பக்தர்கள் அல்லாதவர்களாம். என்னே பித்தலாட்டம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 23.05.1937

முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை

முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் முஸ்லீம்கள் சுமார் 9 கோடி ஜனசங்கை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் மத விஷயங்களிலும் சமூக வாழ்க்கை விஷயங்களிலும் இந்துக்களுடன் மாறுபட்டவர்கள். இந்துக்களும் முஸ்லீம்களை சமூக மதவிஷயங்களில் மாறுபட்டவர்களாகவே கருதி வந்திருக்கிறார்கள். இந்துக்கள் மெஜாரிட்டியாகவும் முஸ்லீம்கள் மைனாரிட்டியாகவும் இருந்து வருவதாலும் இந்து மத சம்பிரதாயங்கள் மத ஆதாரங்கள் ஆகியவற்றில் முஸ்லீம் சமூகத்தையும் மதத்தையும் இழித்துக் கூறப்பட்டிருப்பதாலும் இந்துக்களால் முஸ்லீம்கள் தாழ்மையாய்க் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்தியாவில் அரசியல் உத்யோக கிளர்ச்சி ஏற்பட்டு உத்தியோகங்களை இந்திய மக்களுக்கு அரசாங்கத்தார் அளிக்க ஏற்பட்ட காலமுதல் ஒவ்வொரு மதமும் ஜாதியும் வகுப்பும் உத்தியோகங்களுக்கு போட்டி போட முன்வந்ததின் மூலம் தாழ்மையாயும் இழிவாயும் கருதப்பட்டு வந்த பெரும்பான்மையான மதங்களும் ஜாதிகளும் ஒருவாறு கண்விழிக்கத் தொடங்கி தங்களது இழிவுகளையும் பின்நிலையையும் நிவர்த்தித்துக் கொள்ள முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றிபெற்றும் வருகின்றன. இந்த முறையினால்தான், இந்திய முஸ்லீம் சமூகமானது குறிப்பாக தென் இந்திய முஸ்லீம் சமூகமானது இந்த 10, 20...

தினசரி பத்திரிகை

தினசரி பத்திரிகை

பார்ப்பனரல்லாதாருக்குத் தினசரிப் பத்திரிகை இல்லை என்பதைப்பற்றி சென்றவாரம் நாம் “குடி அரசில்” தலையங்கம் எழுதி இருந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதில் குறிப்பிடப்பட்டது போலவே சென்னையில் 9-5-37ல் கூடிய ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக சபை கூட்டத்தில் இதுபற்றி யோசிக்கப்பட்டு இப்போது சென்னையில் வாரம் இரு முறையாக நடக்கும் “விடுதலை” பத்திரிகையை ஈரோட்டுக்கு மாற்றி ஈரோட்டிலேயே தினசரியாக நடத்துவதென்றும் அதன் நஷ்டத்திற்கு ஆக ஒரு குறிப்பிட்ட தொகையை தனிப்பட்ட முறையில் சில கனவான்கள் உதவி வருவதென்றும் மேல் கொண்டு வேண்டியிருக்கும் தொகையை மற்றும் பல கனவான்களிடமிருந்து தோழர் ஈ.வெ. ராமசாமி வசூலித்துக்கொள்ள வேண்டியது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது. அதன்படி “விடுதலை” பத்திரிகையை தினசரியாக நடத்த ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கலக்டர் அவர்களுக்கும் அனுமதி அளிக்கும்படி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. அனேகமாய் இந்த தடவை தினசரி விஷயம் வெற்றி பெறலாம் என்றே கருதுகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.05.1937

பார்ப்பன விஷமம்

பார்ப்பன விஷமம்

சென்னை அரசாங்கத்தின் தற்கால மந்திரிகள் நிலவரியில் 100க்கு 25 வீதம் குறைத்து வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்து பொறாமைப்பட்ட காங்கிரஸ் – பார்ப்பனப் பத்திரிக்கைகள் சிறப்பாக “சுதேசமித்திரன்” “இந்த வருஷத்துக்கு இல்லையாம்” என்று தலைப்புக் கொடுத்து பரிகாசம் செய்திருந்தது பற்றி அப்பொழுதே கண்டித்து எழுதினோம். இந்த வருஷத்துக்கு குறைத்திருந்தாலும் “சென்ற வருஷத்துக்கு இல்லையாம்” என்று விஷமத்தனமாக குறை கூறித்தான் இருக்குமே ஒழிய குறைத்தது பற்றி ஒரு நாளும் திருப்தி அடையவோ நன்றி காட்டவோ முன்வராது. ஏனெனில் அது அந்த வகுப்பின் சுபாவமேயாகும். எப்படியாவது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை தடுப்பதையே நோக்கமாகக்கொண்டு குறை கூறி விஷமப் பிரசாரம் செய்யும் கூட்டம் ஒரு நாளும் யோக்கியமாய் நடந்துகொள்ள முடியாதல்லவா? இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பம்பாய் மந்திரிகளைப் பற்றியும் இதே மாதிரி விஷமப் பிரசாரம் செய்ய “சுதேசமித்திரன்” முன்வந்து விட்டது. அதாவது 14-5-37ந் தேதி மித்திரன் பத்திரிக்கையில் “மது விலக்கேனும் உண்டா” என்று தலைப்புக்கொடுத்து...

உலகில் பெரிய வெட்கக்கேடு

உலகில் பெரிய வெட்கக்கேடு

காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் வெற்றி பெற்றார்கள். பெற்ற பிறகு போர்டு சென்ட் ஜார்ஜ் கோட்டை வாயில்படியில் நின்றுகொண்டு கூப்பாடு போடுகிறார்கள். திருட்டுத்தனமாக கவர்னர்கள் வீட்டுக்கு போய் ஓலமிடுகிறார்கள். கோட்டை வாசல் திறந்து கிடந்தும் உள்ளே இருக்கும் கவர்னர் பிரபு கோட்டைக்குள் வாருங்கள் வாருங்கள் என்று அழைத்தும் போக முடியாமல் அழுகிறார்கள். வெற்றி பெற்ற “வீரர்கள்” எல்லோருக்கும் தலைவர் உள்பட உள்ளே போகவும் மந்திரி பதவி ஏற்கவும் சம்பளத்தை வாங்கி மூட்டை கட்டவும் அளவு கடந்த ஆசை இருந்தும் கவர்னர் பிரபுவுக்கும் எப்படியாவது இவர்கள் தலையில் மந்திரி பதவியை கட்டி அடித்து தனது காரியத்தை கஷ்டமில்லாமல் ஆக்கிக்கொள்ளலாம் என்கின்ற கருத்தில் தாராளமாய் இடம் கொடுத்தும் போலி வெட்கமும் ஜனங்களுக்குக் கொடுத்த இமயமலை போன்ற வாக்குறுதிகளும் பின்னே நின்று கொண்டு மின்சார சக்தி இழுப்பது போல் இழுக்கிறது. அதுவும் ஒரு அடி முன்னே போனால் இரண்டு அடி பின்னுக்கு இழுக்கிறது. இந்த விதமாக ஒரு காட்சி...

கவர்னர் பிரபு நடத்தை கண்டனம்

கவர்னர் பிரபு நடத்தை கண்டனம்

9.5.37ந்தேதி சென்னையில் நடந்த ஜஸ்டிஸ்கட்சி நிர்வாக சபைக் கூட்டத்தில் சென்னை கவர்னரின் நடத்தையை கண்டித்து ஒரு தீர்மானம் போடப்பட்டிருப்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். இதன் காரணம் மந்திரிசபை அமைப்பதில் கவர்னர் நடந்து கொண்ட மாதிரியேயாகும். இவ்விஷயத்தைப்பற்றி சென்ற மாதத்திலேயே நாம் கண்டித்து எழுதியிருந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதை கவனித்து ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக சபையானது கவர்னர் பிரபு நடத்தையைக் கண்டித்து தீர்மானம் செய்ததை நாம் மனப்பூர்வமாகப் பாராட்டி வரவேற்கிறோம். உண்மையிலேயே எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள், கெட்ட பெயர்கள், வீண் பழிகள், எதிரிகளின் விஷமப் பிரசாரம் ஆகியவைகளுக்கு ஆளாகிக்கொண்டும் இரட்டை ஆòயில் சர்க்கார் மெம்பர்களின் தொல்லைகளை சமாளித்துக்கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல் நிர்வாகத்தை நடத்தி வந்ததற்கு வேலை முடிவில் அரசாங்க தலைமை அதிகாரியான கவர்னர் பிரபு நடந்துகொண்ட மாதிரியானது மிகவும் வருந்தக் கூடியது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்தியாவில் உள்ள இதர 10 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாகாணங்கள் 5. அவ்வைந்து...

யார் வெள்ளைக்கார ஆட்சி  கொண்டுவந்தவர்கள்?

யார் வெள்ளைக்கார ஆட்சி  கொண்டுவந்தவர்கள்?

  காங்கிரஸ் சுலபத்தில் பதவிக்கு வராது காங்கிரஸ் அல்லாதவர்கள் தேசத்துரோகிகளா? தலைவரவர்களே! தோழர்களே!! இந்த பக்கத்துக்கு சுமார் 10, 15 வருஷங்களுக்கு முன் இரண்டு மூன்று தடவை வந்து உபன்யாசம் செய்திருக்கிறேன். அதன் பிறகு இப்போதுதான் உபன்யாசம் செய்கிறேன். அப்போதுள்ள எனது நண்பர்கள் பலரை இப்போது பார்த்து மகிழ்கிறேன். அப்போது எனக்களிக்கப்பட்ட பல வரவேற்பு பத்திரங்கள் போலவே இப்போதும் பல வரவேற்புப் பத்திரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அப்போது காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் என்னை பாராட்டிப் புகழ்ந்து பேசி வரவேற்பு வாசித்தார்கள். இப்போது பகுத்தறிவாளர்களும் சுயமரியாதைக்காரர்களும் ஆதிதிராவிட தோழர்களும் பாராட்டிப் புகழ்ந்து கூறி வரவேற்பு வாசித்தளித்திருக்கிறீர்கள். வரவேற்பு பத்திரங்களில் வழக்கம்போலவே என்னை வானமளாவப் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப் புகழ்ச்சிகளை நான் ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறேன். ஏனெனில் அவ்வளவு பெரும் புகழுக்கும் பாராட்டுதலுக்கும் நான் பொருத்தமுடையவன் அல்ல என்றே கருதுகிறேன். ஆனால் என் மீது உங்களுக்கு உள்ள அன்பும் என்னிடமிருந்து நீங்கள் பெறவிரும்பும் காரியங்களையும் தான் நீங்கள்...

ஜோலார்ப்பேட்டையில் மகுடாபிஷேகம்,  பள்ளிக்கூட ஆண்டு விழா,  வரதராஜ முதலியார் படத் திறப்பு விழா

ஜோலார்ப்பேட்டையில் மகுடாபிஷேகம், பள்ளிக்கூட ஆண்டு விழா, வரதராஜ முதலியார் படத் திறப்பு விழா

  தலைவரவர்களே! தோழர்களே! உலக சரித்திரத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறும் படியான இந்த முக்கியமான நாளில் எனது அன்பிற்குரிய தோழர் வி. பார்த்தசாரதி அவர்களது தந்தையாரும் எனது மதிப்பிற்குரிய நண்பருமான காலம் சென்ற வரதராஜ முதலியார் அவர்களது உருவப்படத்தை இந்தப் பள்ளியில் அலங்கரிக்கும் பெருமையை பெற்றதற்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இம்மாதிரியான உருவப்படங்களை வைப்பது என்பது பூஜைக்கு ஆகவோ பக்திக்கு ஆக நமது குற்றங்களை மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்வதற்கு ஆகவோ மோக்ஷமடைய ஒரு சுருக்கமான வழியை கடைப்பிடிப்பதற்கு ஆகவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மற்றென்னவென்றால் நம்மால் பாராட்டக் கூடியதும் நாம் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும்படியானதுமான பல அரும்பெரும் காரியங்களைச் செய்தவரும் பல அருங்குணங்கள் படைத்தவரும் என்று நாம் கருதும் திவ்விய புருஷர்களது உருவங்கள், பெயர்கள், நடத்தைகள் ஆகியவைகள் நம் முன் தோன்றும் போதெல்லாம் நம் ஞாபகத்துக்கு வரும்போதெல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாகவும் வழிகாட்டியாகவும் நம்பிக்கை...

நீடாமங்கலத்தில் சர்க்கார் தர்பார்

நீடாமங்கலத்தில் சர்க்கார் தர்பார்

“அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் காங்கிரஸ்காரர்கள் சட்டசபையிலும் இரண்டொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் வெற்றி பெற்றுவிட்டதால் அவர்களது தலையைத் திருகிவிட்டது. இன்னது செய்வது என்று தோன்றாமல் தலை விரித்தாடுகிறார்கள். மதுரையில் தெருக்கூட்டிகளுக்கு அவர்களுடைய விளக்குமாறுகளில் காங்கிரஸ் கொடி கட்டிக் கொடுத்து அதைப் பிடித்துக் கூட்டும்படி சேர்மென் உத்திரவிட்டு அந்தப்படியே விளக்குமாறு தோறும் கொடி கட்டி இருந்ததாம். மற்றும் பல இடங்களில் உற்சவங்களில் கோவில் முன் கருடஸ்தம்பம் என்பவைகளிலும் கொடி மரங்களிலும் காங்கிரஸ் கொடிகள் கட்ட முயற்சிப்பதோடு தேர்களிலும் ரதங்களிலும் கூட காங்கிரஸ் கொடி கட்டுவித்து ஊர்கோலம் நடத்தப்படுகின்றனவாம். இதற்கு அதிகாரிகள் அனுகூலமாயிருந்து ஆக்ஷேபணைகளை அடக்கி காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் நடத்த உதவி செய்கிறார்கள் என்றும் சேதிகள் வந்திருக்கின்றன. உதாரணமாக நீடாமங்கலம் ரத உற்சவத்தில் காங்கிரஸ்காரர்கள் கொடிகட்ட முயற்சித்ததும் சிலர் அதை தடுத்ததும் சர்க்கார் அதிகாரிகள் தடுப்பை நிராகரித்து கொடியை ரதத்தில் கட்டச்...

காங்கிரஸ்காரர்கள் அரசியல் ஞானம்

காங்கிரஸ்காரர்கள் அரசியல் ஞானம்

காங்கிரஸ்காரர்களுக்கு காலித்தனம்தான் தெரியுமே ஒழிய – பொய்யும் பித்தலாட்டமும் கூறி தேர்தலில் வெற்றி பெறத்தான் தெரியுமே ஒழிய – தேர்தல்களில் தந்திரமாய் பார்ப்பனர்களை 100க்கு 40, 50 வீதம் புகுத்திக்கொள்ளத்தான் தெரியுமே ஒழிய அவர்களுக்கு அரசியல் ஞானமோ பொதுஜன நன்மை பொறுப்போ சிறிதும் கிடையாது என்று பல தடவை எழுதி வந்திருக்கிறோம். அதற்கு உதாரணங்களும் அவ்வப்போது எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். இப்போது மற்றுமொரு உதாரணம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது சென்னை கார்ப்பரேஷனுக்கு தேர்தல் நடந்து கார்ப்பரேஷனில் காங்கிரஸ்காரர்கள் அமர்ந்து இன்றைக்கு 6, 7 மாத காலமாகிறது. அப்படி இருந்தும் இதுவரை காங்கிரஸ்காரர்கள் எவருக்கும் கார்ப்பரேஷன் வரவு செலவு கணக்கே இன்னதென்று தெரியவில்லை என்பதும் அவர்களில் எவரும் தெரிந்து கொள்ள இதுவரை ஆசைப்பட வில்லை என்பதும் காங்கிரஸ் பத்திரிகைகளாலேயே தெரியவருகிறது. அதாவது கார்ப்பரேஷனுக்கு 2 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் வட்டி நட்டப்படும்படியான பணம் சும்மா தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இந்த விஷயம் இப்போதுதான் அதாவது...

தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை  இப்போதுதான் புத்தி வருகிறது

தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை இப்போதுதான் புத்தி வருகிறது

  தாழ்த்தப்பட்ட மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏய்த்து விட்ட விஷயமாய் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களில் எவ்வளவோ கல்வி அறிவுள்ளவர்களும் உலக ஞானமுள்ள வர்களும் இருந்தாலும் சமயத்தில் மோசம் போகும் புத்தி அவர்களுக்கு வெகுகாலமாகவே இருந்து வருகிறது. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுடன் வாது செய்து வெற்றி பெற்றதின் பலனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு என்று சட்டசபையில் ஒரு அளவு ஸ்தானங்கள் தனித் தொகுதி மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதை காந்தியார் பட்டினி கிடப்பதாகப் பாசாங்கு செய்து அச் சமூக மக்களை ஏமாற்றி தனித் தொகுதி உரிமையை பாழாக்கி அடிமை உரிமைக்கு ஆளாகச் செய்து விட்டார். அப்பொழுதே தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பத்காருக்கு விஷயங்களை விளக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று அதாவது ஒரு காந்தியாரைவிட 6...

கண்டன தீர்மானம்

கண்டன தீர்மானம்

இப்போது காங்கிரஸ்காரர்கள் தாங்கள் மந்திரி வேலையை ஏற்றுக்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தை தங்கள் முட்டாள் தனத்தினால் தவற விட்டு விட்டு மந்திரி பதவி ஏற்றுக்கொண்டவர்கள் மீது பாய்வதும் அவர்களை வைவதுமான இழிவு வேலையில் இறங்கி இருப்பதோடு ஆங்காங்குள்ள பார்ப்பனர்களையும் அடிமைகளையும் பிடித்து புது மந்திரிகளை கண்டித்து தீர்மானம் போட்டு நிறைவேற்றப்பட்டதாக விளம்பரம் செய்து பிரசுரிக்கச் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டு அந்தப்படியே பல தீர்மானங்கள் செய்வதாக பிரசுரித்தும் வருகிறார்கள். இது ஒரு இழிவான தந்திரமேயாகும். வக்கீல்கள் பெரிதும் பார்ப்பனர்களாக இருப்பதாலும் அவர்களுக்கும் பாமர மக்கள் மீது செல்வாக்கு இருப்பதாலும் உள் நாட்டு விரோதத்தால் சுலபத்தில் அடிமைகள் கிடைப்பதாலும் இம்மாதிரி காரியங்கள் செய்ய நினைக்கப் பார்ப்பனர்களுக்கு செளகரியமிருக்கிறது. ஆனபோதிலும் நாம் அதற்குப் பயப்படவில்லை. ஆனால் பொது ஜனங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம். அதாவது ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனரல்லாத சங்கங்களும் அனுதாபிகளும் சுயமரியாதைச் சங்கக்காரர்களும், காங்கிரஸ்காரர்கள் பொய்யும் புளுகும் பேசி பாமர மக்களை ஏமாற்றி...

மந்திரிகள் வேலைத் திட்டம்

மந்திரிகள் வேலைத் திட்டம்

சென்னை மாகாண மந்திரிகள் தங்கள் வேலைத் திட்டத்தில் வெற்றி பெற்று விட்டதாகத் தெரிகிறது. அதாவது நிலவரியில் மொத்தத்தில் 100-க்கு 25 வீதம் – ரூபாய்க்கு கால் ரூ. வீதம் குறைத்து விட திட்டம் போட்டு வரவு செலவு கணக்கு சரிகட்டிக் காண்பித்து கவர்னரிடம் சம்மதம் பெற்று விட்டதாகச் சேதி வெளியாகி இருக்கிறது. இது ஒரு நல்ல காரியம்தான். இதன் மூலம் குடியானவர்களுக்கு அதாவது பூமி உடையவர்களுக்கு இந்த மாகாணத்தைப் பொறுத்த வரை M 1-க்கு 75 லக்ஷ ரூபாய் லாபம் ஏற்படலாம். இது தவிர குடியானவர்களின் கடன்களைத் தீர்க்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிவைக்கத் தீர்மானித்து அதற்கும் சம்மதம் பெற்று விட்டதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு நல்ல காரியம்தான். ஏனெனில் குடியானவர்கள் வரிக்கொடுமையை விட கடன் கொடுமையிலேயே வட்டிக் கொடுமையிலேயே அதிக கஷ்டப்படுவதோடு பொது செல்வமும் பாழாகின்றது என்பதோடு கோர்ட்டுகள் நிலைக்கவும் பார்ப்பன வக்கீல்கள் பிழைக்கவும் பார்ப்பன குமாஸ்தாக்கள் கொள்ளை அடிக்கவுமான...

மும்மூர்த்திகள் கண்டனம்

மும்மூர்த்திகள் கண்டனம்

அகில இந்திய முஸ்லிம் தலைவர் ஜனாப் ஜின்னாவும், முஸ்லீம் மிதவாதத் தலைவர் ஸர். முகமது யாகூபும், ஆதிதிராவிடர் தலைவர் திவான் பகதூர் ஆர். ÿநிவாஸனும் வெளியிட்டுள்ள மூன்று அறிக்கைகள் இன்றையப் பத்திரிகையில் வெளிவருகின்றன. அம்மூன்று அறிக்கைகளையும் முஸ்லீம்களும் பார்ப்பனரல்லாத ஹிந்துக்களும், ஒடுக்கப்பட்டவர்களும், கிறிஸ்தவர்களும் ஊன்றிப் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். காங்கரஸ் – இந்திய விடுதலையின் பேரால் – இந்தியாவுக்கும் மைனாரட்டி சமூகங்களுக்கும் செய்துவரும் தீமைகளை அம்மூன்று அறிக்கைகளும் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. அரசியல் விஷயங்கள் பலவற்றில் அம்மூன்று தலைவர்களும் மாறுபட்ட அபிப்பிராய முடையவர்களா யிருந்தும் காங்கரஸ் விஷயத்தில் அம்மூவரும் ஒற்றுமையான அபிப்பிராய முடையவர்களாயிருப்பது முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம். காந்தி காங்கிரசில் ஆதிக்கம் பெற்றது முதல் காங்கிரஸ் ஒரு ஹிந்து ஸ்தாபனம் ஆகிவிட்டதென்று ஸர். முகமது யாக்கூப் கூறுகிறார். தென்னாட்டைப் பொறுத்த வரையில் காங்கரஸ் ஒரு பார்ப்பன அக்கிரகாரமாக இருப்பது வெளிப்படை. பிரிட்டிஷ் சர்க்கார் தயவினால் விடுதலை பெற்ற சமூகங்களை காங்கரஸ் பேரால் பார்ப்பனர்களுக்கு...

ஈரோடு முனிசிபல் சந்தைப்பேட்டை  அபாய சம்பவம்

ஈரோடு முனிசிபல் சந்தைப்பேட்டை அபாய சம்பவம்

  – விசிட்டர் ஈரோடு முனிசிபாலிட்டியார் சென்ற வாரம் கூடிய தங்கள் மீட்டிங்கில் சந்தைப்பேட்டை அபாயத்துக்கு ஆளானவர்கள் சகாய நிதிக்கு ஆக 5000 ரூபாய் ஒதுக்கிவைப்பது என்று தீர்மானித்து இருக்கிறார்கள். சேர்மென் அவர்களும் கமிஷனர் அவர்களும் கவுன்சிலர்களும் இது விஷயத்தில் மிக்க அனுதாபம் காட்டிப் பேசியதோடு மிகவும் கஷ்டப்பட்டு கஷ்ட நிவாரண வேலையும் செய்தும் வருகிறார்கள். சர்க்கார் டாக்டரும் மிக்க கவலையோடு வேலை செய்து வருகிறார். இவற்றை எல்லா மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். விஷயம் இப்படி இருக்க, தந்திரத்தில் கவுன்சிலர்களாக ஆசைப்படும் சிலர் இவற்றிற்கு மாறாக பொய் நோட்டீசுகளும் பித்தலாட்ட விளம்பரங்களும் முதலைக்கண்ணீர் அழுகைகளும் கொண்டு ஊசியை மலையாக்கிப் பேசி மக்களை மயக்கப் பார்க்கிறார்கள் என்றாலும் முடிவில் அவர்கள் நிலை பரிதாபப்படக் கூடியதாகத்தான் இருக்கும் என்று இப்போதே கூறிவிடுகிறேன். பொது ஜனங்கள் பேரால் பண வசூல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் எனக்குப் பொறாமை இல்லை. சிலருக்கு அவசரமாய் சாப்பாட்டுக்கு வழிகள் வேண்டியிருக்கிறது. “ஆத்துத் தண்ணீரை...

பார்ப்பனரல்லாதாருக்குப்  பத்திரிகை இல்லை  அறிக்கை

பார்ப்பனரல்லாதாருக்குப்  பத்திரிகை இல்லை அறிக்கை

  “ஜனநாயகம்” நின்று விட்டது. “திராவிடன்” மறைந்து 4, 5 வருஷங்கள் ஆகிவிட்டன. “தமிழ்நாடு”ம் அனேகமாய் மறைந்து விட்டது என்றே சொல்லலாம். “விடுதலை” இப்பவோ பின்னையோ என்று இருக்கிறது. மற்றும் வாரப் பத்திரிக்கைகள் பலவற்றில் பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தைக் குறி வைத்து நடத்தப்பட்டு வந்தவைகள் பல ஒழிந்துவிட்டன. இரண்டொன்று பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படுகின்றன என்றாலும் அவைகள் பார்ப்பனரல்லாதார் குறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வகுப்புவாதம் என்று எழுதி பார்ப்பனர்களுக்கு அடிமையாகவே ஆகி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வையும் வேலையில் ஈடுபட்டு வாழவேண்டிய நிலையில் இருக்கின்றன. மற்றபடி வேறு எங்காவது ஒன்று இரண்டு வாரப்பத்திரிக்கையோ மாதப் பத்திரிக்கையோ இருந்தால் அவைகளும் காங்கிரஸ் பத்திரிகையாகத்தான் இருந்து வருகின்றன. “விதிவிலக்காக” “குடி அரசு”, “நகரதூதன்”, “விடுதலை” முதலாகிய பத்திரிகைகள் இருந்த போதிலும் அவைகள் இன்று வாரப்பத்திரிக்கைகளாக இருக்கின்றனவே ஒழிய தினப் பத்திரிகை இன்று பார்ப்பனரல்லாதார் குறைகளை நீக்கவோ நாட்டு நடவடிக்கைகளின் உண்மையை எடுத்துச் சொல்லவோ, ஒன்று கூட இல்லவே...

காங்கிரஸ் பூச்சாண்டி

காங்கிரஸ் பூச்சாண்டி

காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய மானங்கெட்ட பிகுவைக் காட்டிக்கொள்வதற்கு – அதாவது பொது ஜனங்களை ஏமாற்ற ஏனெனில் இதற்கு முன் பல தடவைகளில் சட்டசபைகள் “கழுதைகளும் நாய்களும் போகக்கூடியவை” என்றும் சட்ட சபைகளினால் ஒரு காரியமும் செய்ய முடியாதென்றும் கூப்பாடு போட்டுக்கொண்டு திரிந்ததோடு இரண்டு ஒரு சமயங்களில் சட்டசபையில் இருந்தே காலஞ்சென்ற மோதிலால் நேரு போன்றவர்கள் “சட்டசபைக்கு வந்ததே முட்டாள்தன” மென்றும் “இப்போதுதான் புத்தி வந்தது” என்றும் சொல்லி “வீரகர்ஜனை” செய்துவிட்டு வெளியேறி வந்தும், சமீபகாலமாக 2 வருஷத்திற்கு மேல் இந்திய சட்டசபையில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி பலம் இருந்தும் ஒரு காரியமும் செய்ய முடியாமல் போய் அறிவுள்ள ஓட்டர்கள் முன் தலை குனிய நேர்ந்தும் இருப்பவைகளான பல காரணங்களால் இப்போது காங்கிரசுக்காரர்கள் சட்டசபைக்குப் போனதற்கும் மந்திரி பதவி ஏற்று சம்பளம் பெற்று அதிகாரம் செய்வதற்கும் ஆசைப்பட்ட பிறகு பொதுஜனங்களுக்கு ஏதாவது ஒரு ஏமாற்றுதலான காரியம் செய்யாவிட்டால் தங்களை பழையபடி அதாவது தாங்கள் முன் சொன்னபடி...

காங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை  ஏற்பதும் – மறுப்பதும் ஒன்றே  ஆச்சாரியார் ஆத்திரம்

காங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை ஏற்பதும் – மறுப்பதும் ஒன்றே ஆச்சாரியார் ஆத்திரம்

  ~cmatter தோழர்களே! எலக்ஷன் முடிந்த இந்த இரண்டு மாதகாலமாய் எவ்வளவோ இடத்துக்கு நாங்கள் அழைக்கப்பட்டும் பொதுக் கூட்டங்களில் 2, 3 – மாதத்துக்கு பேசக்கூடாது என்கின்ற கருத்தின் மீது பேச மறுத்துவிட்டோம். சமுதாய விஷயமாகவே பேசினோம். இங்கு (பூவாளூரில்) இதற்கு ஆகவே எங்களை வரவழைத்து ஆடம்பர ஊர்வலங்கள் செய்து பல வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக்கொடுத்து அரசியலைப்பற்றி பேச வேண்டுமென்று கட்டளை இட்டு இருக்கிறீர்கள். ஏதோ எனது அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் தயவு செய்து பொறுமையாய்க் கேட்டு நன்றாகச் சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். வெறுப்பாகவும் கருதி விடாதீர்கள். தற்கால அரசியல் நிலை தற்கால அரசியல் என்றால் எதைப் பேசுவது? இன்று மிக்க பிரபலமான பேச்சாய் இருக்கும் அரசியல் காங்கிரஸ் வெற்றியும் ஆணவப் பேச்சும் அவர்களது கூப்பாடுகளும் விஷமப் பிரசாரங்களுமல்லாமல் வேறு எதைச் சொல்லுவது என்பது எனக்கு விளங்கவில்லை. எலக்ஷனில் தோல்வியுற்றதாகக் கருதிய ஜஸ்டிஸ் கட்சியார்...

இத்தொல்லை என்று ஒழியும்?

இத்தொல்லை என்று ஒழியும்?

இன்று இந்நாட்டில் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் முதலாகிய துறைகளின் சீர்திருத்தம் முழுவதும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார், இந்துக்கள் – முஸ்லீம்கள் என்கின்ற வகுப்பு சச்சரவுகளாகவும் மதக்கலவரங்களாகவும் இருந்து வருகிறது. சென்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி – தமிழ்நாட்டு காங்கிரஸ் தத்துவம் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு போரிலும் வடநாட்டு காங்கிரஸ் தத்துவம் பெரிதும் இந்து முஸ்லீம் என்கின்ற மதப்போரிலும் இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் காங்கிரசுக்கும் காங்கிரஸ் எதிர்ப்புக் கòக்கும் உள்ள பேதத்தின் காரணம் 100க்கு 90 பாகம் வகுப்புக்கும் மதத்துக்கும் பாதுகாப்புக்கும் சுதந்திரமும் சமஉரிமையும் கேட்கும் பிரச்சினையே முக்கியமாக இருக்கிறது. இவற்றை மறுப்பதே தேசியம் – தேசாபிமானம் என்று காங்கிரஸ் சொல்லுகிறதே ஒழிய வேறு கொள்கை எதையும் தேசாபிமானத்துக்கு அறிகுறியாய் சொல்லுவதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்பிரிவினையானது பார்ப்பனர்களை ஒன்று சேர்த்து கட்டுப்பாடாய் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை அழுத்தி வருகிறது. காங்கிரஸ் தேசாபிமானம் என்பதின் பயனாய் வர வர...

ஈரோடு சந்தைப்பேட்டை  அபாய சம்பவம்  உண்மை விபரம்

ஈரோடு சந்தைப்பேட்டை  அபாய சம்பவம் உண்மை விபரம்

  “எதிர்பாராத அபாயம்” என்னும் தலைப்பில் சென்ற வாரம் ஈரோடு சந்தைப்பேட்டையில் வேலை முடியாத கொட்டகையில் ஜனங்கள் புகுந்து தூண்களில் சாய்ந்ததால் கொட்டகை சாய்ந்து ஆபத்து ஏற்பட்டதைப்பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றிய உண்மையை சரிவர விசாரித்ததில் கீழ்க்கண்ட சரியான புள்ளி விபரம் கிடைத்திருக்கிறது. அதாவது சந்தைப்பேட்டையில் கொட்டகை சாய்ந்ததில் அதற்குள் சிக்கி காயப்பட்டவர்கள் மொத்தம் 55 பேர்கள் என்றும், காங்கிரஸ்காரர் களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் செய்த விஷமப்பிரசாரப்படி 200 பேர்கள் அல்ல என்றும், மற்றும் அந்த இடத்தில் மடிந்தவர்கள் 4 பேர்களே ஆவார்கள் என்றும், காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் செய்யும் குறும்புத்தனப் பிரசாரப்படி 20 பேர்கள் அல்ல என்றும், ஆஸ்பத்திரியில் சேர்த்துக்கொண்டவர்கள் 35 பேர்கள் என்றும் மீதிபேர்கள் தாங்கள் சொந்த சிகிச்சை செய்து கொள்ளுகிறார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களில் 4 பேர்கள் தான் இறந்தவர்கள் என்றும், அடிபட்டு வெளியூருக்குப் போய்விட்டவர்களில் சுமார் 4 அல்லது 5 பேர்களே இறந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது....

துறையூரில் சுயமரியாதைப் பிரசாரம்  கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்

துறையூரில் சுயமரியாதைப் பிரசாரம் கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்

~cmatter எந்தவிதமான கேள்விக்கும் பதில் சொல்லி பொதுமக்களை திருப்திப்படுத்தத்தான் வந்திருக்கிறோம் என்றும், காங்கிரஸ்காரர்களைப் போன்று பதில் சொல்லாது கூட்டத்தை கலைத்துவிட்டுப் போக வரவில்லை என்றும், தேசபக்தி என்பது தற்கால காங்கிரஸ் நவீன பக்தர்களுக்கு மட்டும் சொந்தமல்லவென்றும், ராஜகோபாலாச்சாரியார் கூட்டம் நாளைய தினம் சுயராஜ்யம் வருகிறது என்றால் நான் இன்றைய தினமே சுயராஜ்யம் வரவேண்டும் என்று சொல்லுகிறேன் என்றும், ஆனால் இன்று சுயராஜ்யம் கிடைக்குமானால் பார்ப்பனரல்லாதாரின் உரிமைக்கு யார் உத்திரவாதி என்றும், இன்று மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் ஆதிக்கம் செலுத்தும் பிராமணக் கூட்டம் காங்கிரசின் பேரால் நம்மீது ஆதிக்கம் வகிக்க சட்டசபையில் 160 ஸ்தானங்களைக் கொண்ட கட்சியில் 49 பார்ப்பனர்கள் ஆதிக்கம் வகிக்கவும் 40 ஸ்தானங்களைக் கொண்ட சென்னை கார்ப்பரேஷனில் 11-பார்ப்பனர்கள் ஆதிக்கம் வகிக்கிறார்கள் என்றும் பதவி ஏற்று மக்களுக்கு நன்மை செய்வதாக ஓட்டுப்பெற்று இப்பொழுது உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்திகள் போன்று விழிக்கிறார்கள் என்றும், திரும்பவும் தேர்தல்...

ஆச்சாரியாருக்கு பைத்தியம்

ஆச்சாரியாருக்கு பைத்தியம்

ஏமாற்ற மடைந்தவர்கள், சொத்தை இழந்தவர்கள் முதலியவர்களுக்கும் புத்தி சுவாதீனமற்று பைத்தியம் பிடிப்பது வழக்கம். அதிக புத்திசாலி என்பவர்களுக்கும் கூறுகெட்டு மூளை கலங்கி பைத்தியம் பிடிப்பதும் வழக்கம் என்று உடல்கூறு வல்லவர்கள் சொல்லுவதுண்டு. நமது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அதை மெய்ப்பிக்கிறார். தான் எதிர்பார்த்து திட்டம் போட்டு வீடு முதலானவைகள் வாடகைக்கு அமர்த்தத் தெரிந்தெடுத்து “அடுத்த நடை கவர்னர் வீட்டுக்குப் போகவேண்டியதுதான் பாக்கி, வரும்போது மந்திரி தாக்கீது பெற்று வரப்போகிறோம்” என்று மனப்பால் குடித்து ஆசையோடு – பேராசையோடு எதிர்பார்த்திருந்த மந்திரி வேலை கிடைக்கவில்லை என்று திடீரென்று ஏற்பட்டவுடன் மூளை கலங்கி கண்டபடி உளற ஆரம்பித்துவிட்டார். இந்த நிலை மாறாதிருக்குமானால் கூடிய சீக்கிரம் அவரை பைத்தியகார ஆஸ்பத்திரியில் தான் பார்க்க நேரும் என்றே கருதுகிறோம். அவரது வாயும் நாக்கும் அறிஞர்கள் மிகவும் வெறுக்கத்தகுந்த தன்மைக்கு வந்து விட்டன. சத்தியமூர்த்தி, குப்புசாமி, உபயதுல்லா நிலைக்கு இறங்கிவிட்டார். இதன் காரணம் எல்லாம் ராமாயணக் கதையில் ராமனின் அயோக்கியத்தனத்தை...

அனாமத் மந்திரிகள் வேலைத் திட்டம்

அனாமத் மந்திரிகள் வேலைத் திட்டம்

தற்கால மந்திரி சபையை நாம் அனாமத் மந்திரி சபை என்று ஏன் சொல்லுகிறோம் என்பது வாசகர்கள் அறிந்ததே யாகும். ஏனெனில் இவர்களுக்கு ஆயுள் இவ்வளவு என்று குறிக்கப்படவில்லை. மேலும் இவர்கள் பொது ஜனங்களின் பொது நன்மைகள் என்று பொதுவாய் சொல்லப்படுபவைகளைத் தவிர ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட எந்த கொள்கையையோ ஏற்கனவே உள்ள எந்தக் கò சார்பையோ உடையவர்கள் அல்ல. தாங்களாகவே ஒரு நெருக்கடியை சமாளிக்க ஒப்புக்கொண்டவர்கள் என்பதைத் தவிர எவ்வித வேறு கவலைகொண்டும் நியாயம் கொண்டும் அப்பதவிகளை ஒப்புக்கொண்டவர்களும் அல்ல. அதோடு கவர்னர் பிரபு எந்த நிமிஷத்தில் 6 பேர்களையும் கூப்பிட்டு ரைட் எபவுட்டர்ன் மார்ச் – (பின்னால் பக்கம் திரும்பி நட) என்றால் பேசாமல் வெளியில் நடக்க வேண்டியவர்களே. ஆதலால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு நிர்ப்பந்தம் இல்லாமல் அனாமத்தாய் இருந்தாலும் இம்மந்திரிகளுக்கு பொது நாணையத்தை உத்தேசித்து பொறுப்பு இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இஷ்டப்பட்டால் இவர்களால் நன்மையான காரியம்...

கட்சி மாறுதல்

கட்சி மாறுதல்

இப்போது பலர் கட்சிவிட்டு கட்சி மாறுகிறார்கள். அதிலும் பல கட்சிகளை விட்டு காங்கிரசில் பலர் வேகமாய்ச் சேருகிறார்கள். உத்தியோகம் பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்தால்தான் கிடைக்கும் என்கின்ற எண்ணத்தை சிலருக்கு சமீபத்தில் நடந்த முட்டாள் தேர்தல் காட்டிவிட்டதால் அவசரத்தில் யார் யாருக்குப் பதவிகள் வேண்டுமோ அவர்களும் பதவிகள் இல்லாவிட்டால் யார் யாருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்காதோ அவர்களும் வாழ்வுக்கும் வேறு யோக்கியமான வழியில்லாதவர்களும் இப்போது வேகமாகக் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். சிலர் பட்டத்தையும் விடுகிறார்கள். தரித்திரம் வந்த பல குடும்பங்கள் தங்களது உயர்ந்த விலையுள்ள பட்டுச் சேலைகளை எவ்வளவு புதிதாயும் நல்லதாயும் இருந்தாலும் பகுதி விலைக்கும் கால் விலைக்கும் விற்று குடும்பம் நடத்தத் துணிவது போல் தங்கள் பட்டங்களை இப்போது அவசர விலைக்கு விற்று வருகிறார்கள். இச்செய்கை அவரவர்களின் தரித்திர நிலைமையைக் காட்டுகிறதே தவிர இதனால் எவ்வித உயர்குணமும் ஏற்பட்டு விடவில்லை. தோழர் சீதாராம ரெட்டியார் ராவ்பகதூர் பட்டத்தை விட்டார். எப்போது...

எதிர்பாராத அபாயம்

எதிர்பாராத அபாயம்

ஈரோடு முனிசிபல் வாரச் சந்தை நடைபெறும் பேட்டையில் 10 அடி அகலத்தில் 200 அடி நீளத்தில் சில்லறை வியாபாரிகளுக்காக ஓட்டுக் கொட்டகை போடுவதற்கான வேலைகள் ஆரம்பித்து வேலை நடந்து கொண்டிருந்ததானது 21-4-37ந்தேதி தூண் நிறுத்தி வெட்டுக்கை போட்டு ரீப்பர் அடித்து ஓடுகள் மேலேற்றி மேயாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22-4-37ந் தேதி சந்தை கூட வேண்டிய நாள் ஆனதால் அன்று வழக்கம் போல் சந்தை கூடியது. அன்று மாலை 5 மணிக்குப் பெரிய காற்றும் மழையும் வந்ததால் மேல் குறிப்பிட்ட சரிவர முடிவடையாத கொட்டகையின் கீழ் ஜனங்கள் போய் தங்கினார்கள். பூரா வேலை முடியாமல் ஒருபுறம் ஓடு பாரம் ஏற்றப்பட்டு மறுபுறம் பாரமில்லாமல் இருந்த கொட்டகை காற்றினால் சாய்ந்து விட்டது. அது சமயம் அதற்குள் இருந்த ஜனங்கள் அதில் அகப்பட்டுக்கொண்டார்கள். இதன் பயனாய் சுமார் 150 பேர்களுக்கு மேல் பலத்த காயமடைய வேண்டியதாகிவிட்டது. காயமடைந்தவர்களுக்கு முனிசிபல் கமிஷனரும், பொதுஜனங்களும், இவ்வூரில்...

தலைவிதி  சாஸ்திரிகள் அழுகை

தலைவிதி சாஸ்திரிகள் அழுகை

  சென்னை தோழர் சி. விஸ்வநாத சாஸ்திரியார் சென்னை றெளலட் சாஸ்திரிகள் என்று உலகப் பிரசித்தப் பெயர்பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜி சி. குமாரசாமி சாஸ்திரிகளின் சகோதரர். (இவர் கூட ஒருதரம் கொஞ்சநாள் ஹைகோர்ட் ஜட்ஜி வேலை பார்த்ததாக ஞாபகம், அது எப்படியோ போகட்டும்) இவர் 20.4.37ந் தேதி “இந்து” பத்திரிகைக்கு ஒரு சேதி அனுப்பியிருக்கிறார். அதாவது கல்வி இலாக்கா காலேஜúகளில் படிக்கும் பிள்ளைகள் 100க்கு 60 பேர் பார்ப்பனர்கள் என்றும் பிள்ளைகளைச் சேர்க்கும் கமிட்டிக்கு 4 காலேஜ் கமிட்டிகளுக்கும் பார்ப்பனர்களில் ஒருவரைக்கூட சர்க்காரார் மெம்பராகப் போடவில்லை என்றும் இரட்டை ஆட்சி காலத்திலாவது (அதாவது ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலாவது) ஒவ்வொரு கமிட்டிக்கு ஒவ்வொரு பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்றும் இப்போது அதுகூட இல்லையென்றும் இப்போதுள்ள மந்திரிகள் ஜஸ்டிஸ்கட்சி மந்திரிகளாகவும் அல்லது பார்ப்பனர்களின் எதிரிகளான மந்திரிகளாகவுமே இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் சூசனை என்னவென்றால் பார்ப்பனர்கள் எல்லாம் இந்த மந்திரிகளுக்கு விரோதமாக இருந்து இவர்களை...

சுயராஜ்யமா? பார்ப்பன ராஜ்யமா?

சுயராஜ்யமா? பார்ப்பன ராஜ்யமா?

சென்னையில் இம்மாதம் 10ந் தேதி சனிக்கிழமை நடந்த கார்ப்பரேஷன் எலக்ஷனில் காங்கிரசால் நிறுத்தப்பட்ட அபேக்ஷகரான தோழர் ஜகநாததாஸ் தோல்வி அடைந்து விட்டார். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆரம்ப கர்த்தாவாகவும் தூணாகவும் இருந்த தோழர் நடேச முதலியார் அவர்கள் தம்பி தோழர் தாதுலிங்க முதலியார் வெற்றி பெற்று விட்டார். ஓட்டு விபரம் தாதுலிங்க முதலியாருக்கு 470 ஓட்டுகளும் காங்கிரஸ் அபேக்ஷகருக்கு 289 ஓட்டுகளுமாய் கிடைத்து இருக்கின்றன. ஜெயிப்பும் தோல்வியும் அபேக்ஷகர்கள் யோக்கியதையையும் ஓட்டர்கள் யோக்கியதையையும் நிச்சயிக்க சரியான கருவி ஆகிவிடும் என்று நாம் கருதுவதில்லை. வேறு அநேக தேர்தல்களில் அயோக்கியர்களும் தகுதி அற்றவர்களும் வெற்றிபெற்று விடுகிறார்கள். இப்போது எலக்ஷன் மோகம் கொண்டவர்கள் பெரிதும் எலக்ஷனில் வெற்றி பெறுவதன் மூலம் வயிறு வளர்க்கலாம் – வாழலாம் என்கின்ற சுயநலக்காரர்களே. அதுவும் ஓட்டர்கள் ஆவதற்கு நியாயமான யோக்கியதை இல்லாமல் குறைந்த அளவு யோக்கியதையை நாணயக்குறைவாய் பயன்படுத்தி ஓட்டர் லிஸ்டில் புகுந்து கொள்ளுகிறவர்களே பெரிதும் தேர்தல்களில் போட்டியும் கவலையும்...

புதிய மந்திரிகள்

புதிய மந்திரிகள்

இன்று நமது சென்னை அரசாங்கத்தில் உள்ள மந்திரிகள் அறுவரும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அல்ல என்பதை ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். இன்றும் நமது அபிப்பிராயம் அதுவேயாகும். ஆனால் அவர்களுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்றும் அவர்களால் எவ்வித காரியமும் எதிர்பார்க்க மக்களுக்கு உரிமை இல்லை என்றும் யாரும் சொல்லிவிட முடியாது. அவர்கள் நமது வரிப்பணத்தில் இருந்தே சம்பளம் பெறுகிறார்கள். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் மக்களுக்கு எவ்வளவு பொறுப்பாளிகளோ அவர்களிடமிருந்து மக்கள் எவ்வளவு எதிர்பார்க் கிறார்களோ அவ்வளவும் இந்த மந்திரிகளிடமும் எதிர்பார்ப்பது தவறல்ல, அதனாலேயே இந்த மந்திரிகளை ஆதரிக்கவோ வரவேற்கவோ நாம் கட்டுப்பட்டவர்கள் என்று யாரும் கருதிவிடமாட்டார்கள். பொதுவாக நோக்குமிடத்து இம் மந்திரிகளை பதவியில் அமர்த்தக் காரணம் அரசியல் சட்டத்தில் கண்டுள்ள நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டும் அதன் கருத்துக்குக் கட்டுப்பட்டும் காங்கிரஸ் மந்திரிகள் நடந்து கொள்ளுவார்கள் என்கின்ற விஷயத்தில் சர்க்காருக்கு உள்ள அவநம்பிக்கையாலேயே அவர்கள் கேட்ட சட்டமற்ற வாக்குறுதியை சர்க்கார் மறுத்து இந்த மந்திரிகளை...

சட்டசபை மெம்பர்களும் ஓட்டர்களும்

சட்டசபை மெம்பர்களும் ஓட்டர்களும்

சட்டசபை மெம்பர்கள் அதிகப்படியான ஓட்டுகளால் தெரிந்தெடுக்கப் பட்டார்கள் என்பதில் யாதொரு ஆட்சேபணையுமில்லை. ஆனால் ஓட்டர்களுக்கு மெம்பர்கள் எந்த விதத்திலாவது ஜவாப்தாரியென்றோ மெம்பர்களுக்கு ஓட்டர்கள் எந்த விதத்திலாவது ஜவாப்தாரியென்றோ சொல்லிவிடமுடியாது. ஏனெனில் சட்டசபைக்கு போய் நாங்கள் இன்னது செய்கிறோம் என்று எவ்வித பொறுப்புள்ள வாக்குறுதியும் மெம்பர்கள் ஓட்டர்களுக்கு கொடுக்கவில்லை. ஓட்டர்களும் சட்டசபை மெம்பர்களை இன்னது செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு ஓட்டு செய்யவில்லை. ஏதோ இருவருக்கும் புரியாததும் சாதாரணத்தில் முடியாததுமான ஆகாயக்கோட்டை போன்ற பேச்சுகளையும் மத நம்பிக்கை போன்ற மூட உபதேசங்களையும் செய்து ஓட்டர்கள் தங்கள் கடமையை உணராமல் கண்மூடித்தனமாய் நடந்துகொள்ளும் படியான பிரசார வலிமையினாலேயே ஓட்டுச்செய்திருக்கிறார்கள். புதிய அரசியலையோ சட்டசபை அதிகாரங்களையோ நன்றாய் உணர்ந்த ஓட்டர்கள் ஓட்டு செய்தவர்களில் 100க்கு ஒருவர் இருவர்கள்கூட இருக்கமாட்டார்கள். பொதுவாக நித்திய வாழ்வில் தற்கால வாழ்க்கை முறையின் பயனாக ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத “இயற்கை” கஷ்டங்கள் அடியோடு மாற்றப்பட்டு விடும் என்கின்ற பேராசையை ஓட்டர்களுக்கு உண்டாக்கி விட்டதின்...

பிரிட்டிஷ் அதிகாரிகளின்  நன்றியற்ற தன்மை

பிரிட்டிஷ் அதிகாரிகளின்  நன்றியற்ற தன்மை

பிரிட்டிஷ் அரசாங்கம் உலகிலுள்ள மற்ற அரசாங்கத்தைவிட கட்டுப்பாடும் சட்டரீதியுமானது என்பது நமது அபிப்பிராயம். பிரிட்டிஷ் சமூகத்தாரும் மற்ற தேசத்தாரைவிட நாணையமுள்ளவர்கள் என்பதும் நமதபிப்பிராயம். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகளின் முறையானது “அரசியல் என்பது நாணையமற்றது, நன்றியற்றது, விஸ்வாசமற்றது” என்று ஒரு பெரியார் கூறியது போல் சிறிதும் நன்றி விஸ்வாசமற்றது என்று சொல்லுவோம். ஒரு காரியத்துக்கு நன்றி விஸ்வாசம் காட்டுவது என்றால் அது லேசானதல்ல என்பதும் தனது சுயநலத்தை விட்டுக் கொடுக்க வேண்டு மென்பதும் நன்றி விஸ்வாசம் காட்டுவது ஒரு தியாகத்துக்கு ஒப்பான தென்பதும் நமதபிப்பிராயமானாலும் உலகில் நல்ல பெயரோ புகழோ சம்பாதிக்கவும் மற்றவர்கள் வெறுக்காதிருக்கவும் நன்றி விஸ்வாசம் காட்ட வேண்டியது மனிதத்தன்மையின் முதல் காரியமாகும். அந்தக் காரணத்தாலேயே நன்றி விஸ்வாசத்தை அவ்வளவு முக்கியமாகவும் அதில்லாத் தன்மையை அவ்வளவு தாழ்மையாகவும் குறிப்பிடுகின்றோம். இந்தியாவில் மாத்திரமல்லாமல் மற்றும் வேறு நாடுகளிலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் இந்தியா உதவி வந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அராஜகம் ஏற்பட...

யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு

யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு

காங்கிரஸ்காரர்களின் ஆசை நிராசையாக ஆகிவிட்டது. அவர்கள் ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி பார்ப்பன ஆதிக்கத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாட்டைப் பழைய கால வருணாச்சிரம மனு ஆட்சி நாடாக ஆக்க முயற்சித்துப் பார்த்தார்கள். இதற்காக அவர்கள் செய்யக்கூடாத சூழ்ச்சிகளையும், பித்தலாட்டங்களையும் செய்து பார்த்தார்கள். கடைசியில் ஏமாற்றமடைந்து தோல்வி அடைந்தார்கள். இன்று அவிழ்த்து விட்ட குதிரைகள் போல் தலைமாடு கால்மாடு தெரியாமல் அளவு கடந்து பேசுவதும் வெறிபிடித்தவர்கள் போல் சீறிச் சீறி எதிரி மீது விழுகிறதுமாய் இருக்கிறார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் இந்த சமயத்தில் தன்னை மறந்து விட்டார். தனக்கு இந்த சந்தர்ப்பத்தில் மந்திரி பதவி கிடைத்தால்தான் உண்டு இல்லாவிட்டால் தன் ஆயுளில் மந்திரியாக முடியாது என்று முடிவு செய்து கொண்டு “சாகிறவனுக்கு சமுத்திரம் முழங்கால் தண்ணீராகத் தோன்றும்” என்பது போல் தனது வாயைத் தாராளமாய் திறந்துவிட்டு சத்தியமூர்த்தியாரைவிட மோசமாய்ப் பேச ஆரம்பித்து விட்டார். 2-4-37ந் தேதி சென்னை மாம்பலம் காங்கிரஸ் சபையில் பேசியதாகக் காணப்படும் சேதியில்...

மந்திரி சபை

மந்திரி சபை

மந்திரிசபை ஏற்பட்டு விட்டது. காங்கிரஸ்காரர்கள் அடிபட்ட சுணங்கன் குரைப்பது போல் தங்களது ஆத்திரத்தை மந்திரிகள் மீது காட்டுகிறார்கள். மந்திரிமார்களை தினமும் கழுதை, நாய் என்று வைத வண்ணமாயிருக்கிறார்கள்; தினமும் கண்டித்து தீர்மானம் போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். இந்த மந்திரிசபை நாளைக்குப் போய்விடும், இன்றைக்குப் போய்விடும் என்று அறிவில்லாமல் பொய்யையும் புளுகையும் வேண்டுமென்றே அளந்தவண்ணமாய் இருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் தங்கள் தவறை உணர்ந்து தங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்தை ரத்து செய்து கொண்டு வந்து அரசாங்கத்தை அடிபணிந்தாலொழிய இந்த மந்திரி சபை சீக்கிரத்தில் ஒழிந்துவிடும் என்று சட்டம் தெரிந்தவர்கள் யாரும் கருதமாட்டார்கள். சட்டத்தில் – சீர்திருத்த சட்டத்தில் விஷயம் தெளிவாக இருக்கிறது. மெஜாரிட்டி கட்சியார் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள நிலைமை இடம் கொடுக்கவில்லையானால் கவர்னர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தன்னிஷ்டப்படி நடத்தலாம் என்பது ஸ்பஷ்டமாக இருக்கிறது. அதை கவர்னர் பின்பற்றியாக வேண்டும். இப்போது மெஜாரிட்டி கட்சியாருக்கு (காங்கிரஸ்காரருக்கு) மந்திரி பதவி ஏற்க...

கேளம்பாக்கத்தில்  சுயமரியாதைத் திருமணம்

கேளம்பாக்கத்தில்  சுயமரியாதைத் திருமணம்

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இல்வாழ்க்கை நடத்துவதேயாகும். ஆனால் இப்போது நமது இந்து மதத்தில் திருமண விஷயத்தில் நடைபெறும் கொடுமையைவிட வேறு எந்த மதத்திலும் நடைபெறுவதில்லை. திருமண விஷயத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது, தாய் தந்தையர்கள் பார்த்து மொண்டியையோ, கிழவனையோ திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறோம். அதற்குக் கட்டுப்பட்டு அப்பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விபசாரம் கற்பிக்கிறோம். மகமதிய மதத்தில் பெண்களுக்குக் கோஷா முறை இருந்தாலும் திருமண விஷயத்தில் உரிமை வழங்கி இருக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்து மதத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கி வருகிறார்கள். குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு அடுத்த படூரில் 04.04.1937 ஆம் நாள் நடைபெற்ற தோழர் வி.டி. ஏழுமலை – தோழர் கே. இராதாபாய் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் சுருக்கம். குடி அரசு – சொற்பொழிவு – 11.04.1937

வாக்குறுதிப் பித்தலாட்டம்  காங்கிரசின் கோழைத்தனம்

வாக்குறுதிப் பித்தலாட்டம் காங்கிரசின் கோழைத்தனம்

  காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க மறுத்தது கோழைத்தனம் என்றே சொல்லுவோம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) மந்திரி பதவி ஏற்க எவ்வளவோ ஆசையாகவும் ஆத்திரமாகவும் இருந்தும் வெளி மாகாண காங்கிரஸ்காரர்களும் சில தலைவர்களும் மந்திரி பதவி ஏற்றால் வெளுத்துப் போகுமே என்று பயந்து மெல்ல முதுகு காட்டி விட்டார்கள். கவர்னர்களிடம் வாக்குறுதி கேட்பது என்பது பொது ஜனங்களை ஏமாற்றக் கண்டுபிடித்த வழியே ஒழிய அதில் எவ்வித அருத்தமும் இல்லை. இதை சென்ற வாரமே எடுத்துரைத்தோம். அப்படி இருந்தும் கவர்னர்கள் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல வார்த்தையே கொடுத்திருக்கிறார்கள். அதாவது சட்டப்படி தமக்கு உள்ள நிர்ப்பந்தங்கள் தவிர மற்ற விஷயங்களில் தன்னால் கூடியவரை எல்லா வழிகளிலும் ஒத்துழைத்து உதவி செய்வதாய்க் கூறியிருக்கிறார். இதை ஆச்சாரியார் பாராட்டி நன்றி செலுத்தி ஏற்றுக்கொண்டு போனவர் பிறகு என்ன காரணத்தாலோ மந்திரி பதவியை அமைக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். இது கவர்னர் அறிக்கையில் இருக்கிறது. “ஏடிண் உதுஞிஞுடூடூஞுணஞிதூ டிணtடிட்ச்tஞுஞீ...

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி ஏற்கக்கூடாது  ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு ஈ.வெ.ரா. தந்தி

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி ஏற்கக்கூடாது ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு ஈ.வெ.ரா. தந்தி

  ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளலாமா என்கின்ற பிரச்சினையின் மீது தோழர் ஈ.வெ. ராமசாமி கட்சித் தலைவரான பொப்பிலி ராஜா அவர்களுக்கு திருவாரூரிலிருந்து 29-ந்தேதி தந்தி மூலம் தெரிவித்த அபிப்பிராயம். “ஜஸ்டிஸ் கட்சியானது நன்றியற்றதும் பொறுப்பை உணராததுமான அரசாங்கத்தில் இப்போது கண்டிப்பாக மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது. சர்க்கார் அதிகாரிகளும் சிப்பந்திகளும் நமது கட்சிக்கு செய்த அட்டூழியங்களையும் விஸ்வாசமற்ற தன்மையையும் பற்றி சர்க்கார் சிறிது கூட கவலை எடுத்துக்கொள்ளவில்லை. பதவி ஏற்றுக்கொண்டால் நமது வேலை மிகவும் கஷ்டமாகிவிடும்.” என்று தெரிவித்து விட்டார். அந்தப்படியே தலைவரும் ஒத்துக்கொள்ள முடியாதென்று கவர்னரிடம் கண்டிப்பாக மறுத்துவிட்டார். குடி அரசு – வேண்டுகோள் – 04.04.1937

யாருக்குக் கணக்குத் தெரியவில்லை?

யாருக்குக் கணக்குத் தெரியவில்லை?

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் மந்திரி பதவி ஒப்புக்கொண்டதால் நாயுடு அவர்களுக்குக் கணக்கே தெரியவில்லை என்றும், சுயமரியாதை இல்லை என்றும் டில்லியிலிருந்து பத்திரிக்கைகளுக்குச் சேதி விட்டிருக்கிறார். காரணம் என்ன சொல்லுகிறார் என்று பார்த்தால், 215 மெம்பர்கள் உள்ள சட்ட சபையில் 16 மெம்பர்கள் மாத்திரம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவி ஏற்றிருக்கிறார்களே, 16ஐ விட மீதி 199 பெரிய எண் என்று தெரிந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார். இது அயோக்கியத்தனத்தின் மீது எழுந்த ஆத்திரத்தால் புத்தி மழுங்கிப்போன ஒருவர் குடி வெறியால் பேசுவது போலவே இருக்கிறதே ஒழிய இதில் உண்மையோ யோக்கியமோ ஏதும் சிறிதும் இருப்பதாகக் காணவில்லை. ஏனெனில் முதலாவது சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி மெம்பராகவோ “16 பேர்” தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்சி சார்பாகவோ (அவர்) மந்திரி சபை அமைக்கவும் இல்லை. மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதை ஜஸ்டிஸ் கட்சித்...

நல்ல சந்தர்ப்பம் வீணாக்கப்பட்டது

நல்ல சந்தர்ப்பம் வீணாக்கப்பட்டது

காங்கிரஸ்காரர்கள் மந்திரி சபையை ஏற்று சீர்திருத்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதின் மூலம் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யக்கூடும் என்பதையும் கவர்னர்கள் தங்கள் விசேஷாதிகாரங்களைச் செலுத்துவதில்லை என்று வாக்குறுதி கொடுத்துவிட்டதினாலேயே காங்கிரஸ்காரர்கள் என்ன செய்ய முடிந்துவிடும் என்பதையும் காங்கிரஸ்காரர்களிடம் குடிகளின் நன்மைக்கு என்று அனுபவத்தில் செய்வதற்கு ஏதாவது கொள்கைகள் இருக்கிறதா என்றும் பார்ப்பதற்கு இருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் வீணாகிவிட்டது. அதாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்காமல் தப்பித்துக்கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கவலை கொண்டு பார்ப்பதாயிருந்தால் காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க முடியாமல் போனது பற்றி பார்ப்பனர்களுக்கு துக்கமும் பார்ப்பனரல்லாதாருக்கு மகிழ்ச்சியுமாய்த்தான் இருக்கும். இதன் உண்மை அறிய வேண்டியவர்கள் எந்த ஊரிலாவது அக்கிராஹார வழி நடந்து பார்த்தால் ஒவ்வொரு பார்ப்பனர் முகத்திலும் அன்று தாலியறுத்த விதவைக் களை ஜொலிப்பதைப் பார்க்கலாம். அது போலவே பார்ப்பனரல்லாதார் தெருக்களைப் பார்த்தால் பண்டிகை போல் காணப்படுவதும் விளங்கும். இக்காட்சி நமக்கு முக்கியமானதல்ல...