காங்கிரசுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது
தோழர் எம்.என்.ராய் காங்கிரசில் பிரதான புருஷர். மிகுந்த தீவிரவாதி. பதவி ஏற்கக்கூடாது என்பவர். காங்கிரஸ் பதவி ஏற்புக்காரர் சூழ்ச்சி பலிக்காமல் போனவுடன் காங்கிரசில் பிளவு ஏற்படுவது நிச்சயமென்று ஏற்பட்டவுடன் காங்கிரஸ் முதலாளி கூட்டத்தார் காங்கிரஸ் சமதர்மக்கட்சியை விலக்க முயற்சி செய்து விட்டார்கள். அதாவது காங்கிரஸ் சமதர்ம வாதிகளின் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான தோழர் ஜவஹர்லால் அவர்கள் ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும் என்றும் பிரிட்டன் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவை காலிசெய்து விட்டு கப்பலேற வேண்டும் என்றும் ஒரு புறம் பல்லவி பாடிக்கொண்டு இருக்கும்போதே மற்றொரு புறம் தோழர் காந்தி பளீரென்று ஜவஹர்லால் கன்னத்தில் அறைந்து பல்லுகளை உதிர்த்தினாற்போல் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு கடுகளவு மனஸ்தாபமோ அதிருப்தியோ நேருவதாய் இருந்தால் என் உயிரை விட்டு அதை தடுப்பேன் என்று சொல்லி எப்படியாவது தனது சீஷர்களுக்குப் பதவி வாங்கிக் கொடுக்கவும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஜெட்லெண்ட் பிரபுவை வாக்குறுதி கேட்கிறார்.. ஜெட்லண்ட் பிரபுவோ இதற்கெல்லாம் சிறிது...