Tagged: 370

சாகடிக்கப்பட்ட 370ஆவது பிரிவு

370ஆவது பிரிவை சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் வேலை திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர்  இணைப்பு ஆவணத்தின்படி தற்காப்பு,  அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு குறித்த  அம்சங்களில்தான் காஷ்மீருக்குப் பொருந்தும் வகையில் இந்தியப் பாராளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்கு மேல் மாநில அரசாங்கத்தின் (அதாவது மாநில சட்டமன்றத்தில்) ஒப்புதலுடன் பிற அம்சங்கள் குறித்து சட்டமியற்றுவதற்கு ஜனாதிபதி உத்தரவிடலாம் என்றும் அப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த  இராஜேந்திர பிரசாத், பிரதமர் நேருவுக்கு 1949 மே 18-ந் தேதியன்று குறிப்பு ஒன்றை  அனுப்பியிருந்தார். “காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்ட பிறகு இந்தப் பிரிவைப் பயன் படுத்தி மத்திய அரசு மற்றும் – காஷ்மீர் மாநில அரசு உறவுகளைப் பற்றி முதலும் கடைசியுமாக முடிவு செய்யலாம். ஆனால்,  370ஆவது பிரிவு வழங்கியுள்ள அசாதாரணமான அதிகாரங்களை மீண்டும்  மீண்டும் பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கும் அதிகாரம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். (ஆதாம்: ஏ.ஜி. நூரணி, தி ஸ்டேட் ஸ்மன் 16.6.1992). ஆனால்...