Tagged: ரூபாய் நோட்டு

‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன?

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. இந்த அறிவிப்பு வரப்போகிறது என்ற தகவல் முன்கூட்டியே கசிந்திருக்கிறது என்றும், அதன் காரணமாகவே மோடி அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கல்கத்தாவில் பா.ஜ.க. 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒரு வங்கியில் ரூ.1 கோடிக்கு டெபாசிட் செய்ததையும் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார். மேற்கு வங்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங், இந்த அறிவிப்பு வரப்போகும் தகவல் முன்கூட்டியே அம்பானி, அதானி தொழில் நிறுவனங்களுக்கு தரப்பட்டள்ளது என்று பேட்டி அளித்திருக்கிறார். கடந்த 3 மாதங்களாக வங்கிகளில் செலுத்தப்பட்ட ‘டெப்பாசிட்’ தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சந்தேக சூழலில் மோடி மீதே கருப்புப் பண குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கின்றன. மோடி மீதான கருப்புப் பண குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள்...