Tagged: மெக்காலே

மெக்கால்லே கல்வித் திட்டம்

மெக்கால்லே கல்வித் திட்டம்: கீழே ஒரு சிறிய படம் மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி என்றும், அதில் சொல்லியிருப்பதாக… “அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும் ஒரு திருடனையோ ஒரு பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும் ஆன்மீக பலம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே அதை அடிமைப் படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்து விட்டு ஆங்கில வழி கல்வியைப் பயன்படுத்தலாம்.” பார்ப்பனியம் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய பொய்களில் இதுவும் ஒன்று. இன்று வரையிலும் அந்தப் பொய் நிலைத்து நிற்கிறது. அவர் அதை இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில் சொன்னதாகச் சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. அவர் இந்தியாவில் இருந்தார். சரி அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டி எடுத்துப் பார்த்தால் ஆயிரம்...

மெக்காலே மீட்டுத் தந்த கல்வி உரிமை!

மெக்காலே மீட்டுத் தந்த கல்வி உரிமை!

பிரிட்டிஷ் ஆட்சியில் வைதீக வெறி பிடித்த பார்ப்பனர்கள், பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருத கல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த அழுத்தத்தினால் பிரிட்டிஷ் ஆட்சி காசியில் ஒரு சமஸ்கிருத பள்ளியைத் தொடங்கி, அடுத்து கல்கத்தாவிலும் ஒரு சமஸ்கிருத பள்ளியை தொடங்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்து மத சீர்திருத்தவாதியும் பார்ப்பனருமான இராஜாராம்  மோகன் ராய், “சமஸ்கிருதக் கல்வியானது இந்தியாவை என்றென்றும் இருளில் ஆழ்த்திவிடும். இந்திய குடிமக்களின் முன்னேற்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அக்கறை இருக்குமானால் கணிதம் இயற்கை தத்துவம், வேதியல் உடற்கூறு இயல் ஆகிய பயனுள்ள அறிவியலைக் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கவர்னர்  ஜெனரலுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வந்தன. பல ஆண்டுகாலம் கருத்து வேறுபாடுகள் நீடித்த பிறகு, பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தை கைவிட்டது. இந்த துணிச்சலான முடிவை எடுத்தவர் கவர்னர் ஜெனரல். அமைச்சரவை...