Tagged: மனு தர்மம்

‘மனுவாதிகளின்’ – கரூர் தீர்மானம்

‘மனுவாதிகளின்’ – கரூர் தீர்மானம்

“இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்ய பரிந்துரைக்கப் படுகிறது.” – மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 12 “சூத்திரனின் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும்.” – மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 13. “மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வர்ணத்தாரும் தமக்குள்ளே மணம் புரிதல் வேண்டும் என்பவர்.” –  அம்பேத்கர். மனுவின் இந்த பார்ப்பன சட்டங்களே சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. மனு கூறிய பிராமண – சத்திரிய – வைசிய – சூத்திரப் பிரிவுகளில் ஏற்பட்ட கலப்பு சாதிக் குழுக்களாக சமூகத்தைப் பிரித்துப் போட்டு விட்டது. இந்த சாதிக் குழுக்கள் தங்கள் சாதி அடையாளத்தை பாதுகாக்கவே துடிக் கின்றன. மீறினால் குடும்பப் பாசம் உறவுகளையே பின்னுக்குத் தள்ளிவிட்டு, பெற்ற மகளையே கொலை செய்யக்கூடிய வெறிக்கு உள்ளாகி விடுகிறார்கள். ‘தமிழினப் போராளியாக’ பெருமைபடுத்தப்படும் மருத்துவர் ராமதாசு முன்னிலையிலேயே அவரது “தளபதி”யாக அவராலேயே பெருமைப்படுத்தப்...

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

“விதவைகள்” சடலங்களை வெட்டி சாய்க்கும் ‘மனுதர்ம’ வெறி

உலகிலே எங்கும் இல்லாத ‘விதவை’ என்ற சமூகக் கொடுமையை பெண்கள் மீது திணித்தது, இந்து பார்ப்பனிய மதம் தான். இதில் கூடுதல் பாதிப்புக்குள்ளானவர்கள் பார்ப்பனப் பெண்கள். மொட்டை அடித்து, ரவிக்கையை கழற்றி, காவி உடை போர்த்தி, மூளையில் உட்கார வைத்து விடுவார்கள். எந்த ‘மகிழ்ச்சி’யான நிகழ்வுகளிலும் பங்கேற்க அவர்களுக்கு உரிமை கிடையாது. பார்ப் பனர்களை பின்பற்றி அவர்கள் வழியில் வாழ முயன்ற, வேறு உயர் வர்ணத்தவரிடமும் இது வேகமாகப் பரவியது. ஆனால், இந்து சாஸ்திர சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கும் பார்ப் பனர்கள், தங்கள் சமூகத்துக்கு  அதனால் பாதிப்பு ஏற்படும்போது அதைக் கைவிடத் தயங்க மாட் டார்கள். இன்று மொட்டையடித்து காவிப் புடவை சுற்றிக் கொள்ளும் பார்ப்பனப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம். ஆனால், பார்ப்பனியத்தைப் பின்பற்றத் துடிக்கும் ஆதிக்கசாதி சக்திகளிடம் விதவைக் கோலத்தைப் பார்க்க முடிகிறது. ‘காதரைன் மேயோ’ என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, இங்கே நடந்த சமூகக்...

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படை யிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனு சாஸ்திரம் எரிக்கப்படவேண்டும் என்றும் மறைந்த பெரியாரியலாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை – மனுதர்மத்தை – ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும். ஆனால், இன்றைய சமூக அமைப்பு, நடை முறைகள், நம்பிக்கைகள், நல்லது கெட்டது பற்றிய உணர்வு, ஏன் ஊர் அமைப்புக்கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின் படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு கால மாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட் டார்கள். நிலைநாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன – அவ்வளவு தான். சாமான்ய மக்கள்கூட ‘மனுநீதி...

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும்  பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும் பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய கவலையைக்கூட இந்திய “சுதந்திர” ஆட்சி தூக்குத் தண்டனைக் கைதிகளிடம் காட்ட முன்வரவில்லை. கிரிமினல் குற்றங்களில் தூக்குத் தண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத ‘சூத்திரர்களும்’, ‘பஞ்சமர்களும்’ தான் என்பதால் மனுதர்மப் பார்வை யுடனே  இந்திய பார்ப்பன ஆட்சி செயல்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலமான 1937 ஆம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கைக் குறிப்பிட வேண்டும். அப்போது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ‘அத்தப்பா கவுண்டன்’ என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் விசாரணை வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது என்று மற்றொரு  நீதிமன்றம், விளக்கம் கூறி, தூக்குத் தண்டனையை நிறுத்தியது. ஒப்புதல் வாக்கு மூலத்தையே சாட்சியமாக ஏற்றுக் கொண்டால், அது, குற்றவாளிக்கு தண்டனையை...