Tagged: மனுதர்மம்

‘விந்து’ வங்கியிலும் வீரியம் பெற்றுள்ள மனுதர்மம்

‘விந்து’ வங்கியிலும் வீரியம் பெற்றுள்ள மனுதர்மம்

குழந்தை பெறுவதற்கான தடைகளை மருத்துவ விஞ்ஞானம் தகர்த்து விட்டது. கருத்தரிக்கும் சக்தி இல்லாமல் போவோருக்கு, நன்கொடை மூலம் குருதிக் கொடை பெறுவதுபோல், விந்துக் கொடை பெறும் முறைகளும் வந்து விட்டன. இதற்காக குருதிகளை சேகரிப்பதுபோல், ‘விந்து’களை கொடையாகப் பெற்று, சேகரிக்கும் மய்யங்கள் செயல்படுகின்றன. இந்த மய்யங்களிலிருந்து விந்துக்களைப் பெற்று, ஊசி மூலம் உடலில் செலுத்தி, கருவை வயிற்றில் வளர்த்து பெறப்படும் விஞ்ஞானக் குழந்தைகள் ஏராளமாக பிறந்து வளர்ந்து வருகின்றனர். குருதிக்கு, சாதி-மத வேறுபாடுகள் கிடையாது. விஞ்ஞானம், ரத்தத்தின் பிரிவுகளை பட்டியலிட்டுள்ளது. சாதிகளைக் கடந்து, ஒவ்வொரு தனி மனிதருக்கும் ரத்தத்தின் பிரிவுகளை கண்டறிந்து, தேவைப்படும்போது அந்தப் பிரிவு ரத்தம் மட்டுமே ஏற்றப்படுகிறது. அதை மட்டுமே உடலும் ஏற்கும். இதேபோல், சாதி மத அடையாளங்களைக் கடந்து பெறப்படும் விந்துகளும், பெண்களின் கருப்பையில் செலுத்தப்படுகின்றன. ஆனாலும்கூட மருந்துவ விஞ்ஞானம் மகத்தான சாதனைகளை செய்து, மனித குலத்தை உய்விக்க வந்தாலும்கூட, ‘மனுதர்ம’ சிந்தனை மட்டும் மாறவே இல்லை....

சமூகத்தை ஆட்டிப் படைத்த மனுதர்மம்!

சமூகத்தை ஆட்டிப் படைத்த மனுதர்மம்!

வைசியர்கள் சூத்திரர்கள் சண்டாளர்கள் ஆகியோர் இடங்கை, வலங்கை என  இரு பெரும் பிரிவுகளாகப் மோதினர் தோழர் அருணன் எழுதிய ‘தமிழகத்தில் – சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு’ நூலி லிருந்து. புராதன பொதுவுடமைச் சமுதாயமானது தனது உள் பலவீனத்தால் சிதைந்தபோது உலகில் அடிமைச் சமுதாய அமைப்பு எழுந்தது. இந்தியாவிலும் எழுந்தது. இங்கே வர்ணாஸ்ரமம் என்கிற வடிவத்தில் அது எழுந்தது. மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிறப்பின் அடிப்படையில் நால் வருணங்களாகப் பிரிக்கிற அந்த அமைப்பில் சூத்திரர்களின் நிலை கிட்டத்தட்ட அடிமை நிலை யாகவே இருந்தது என்றால், இந்த நால் வருணத்திற்கு அப்பாற்பட்ட சண்டாளர்கள் என்பவர்களின் நிலையோ அடிமை நிலையேதான். கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி இப்படிக் கூறுகிறது – “சூத்திரர்களுக்கு கடவுள் விடுத்துள்ள ஒரே வேலை பிராமணர், ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினருக்கும்...