Tagged: மணி

நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)

நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)

திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் ‘தமிழர் தலைவர்’ பெரியார் வரலாற்று நூலில் திரிக்கப்பட்ட பிழைகளை நேர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இக்கட்டுரை வெளியிடப் படுகிறது. பெரியாரின் வாழ்வில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக, நாகம்மையார் மறைவுக்கு (11-5-1933) அடுத்த நாள் திருச்சியில் 144 தடையை மீறி, இரு கிறிஸ்துவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார் என்பது ஒன்றாகும். திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ எனும் 1939 ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலிலும் “11-5-1933 இல் நாகம்மையார் காலஞ்சென்றார். 12-5-1933 இல் ஈ.வெ.ரா திருச்சி சென்று அங்கு ஒரு கிறிஸ்துவ விவாகத்தை 144 வது செக்ஷனை மீறி நடத்தி வைத்து அரஸ்டு செய்யப்பட்டார். பிறகு, சர்க்காரால் இந்த வழக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றியே தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” இரு பதிப்புகளிலும்...