Tagged: மக்கள் சந்திப்பு

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்கிடும் துண்டறிக்கைகளை வழங்கி பெரியார் கொள்கைகளை விளக்கிடும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின் பரப்புரைக்காக வாங்கப்பட்டுள்ள ‘வேனில்’ தோழர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். வாகனத்திலேயே உணவுப் பொருள்களை எடுத்துப்போய் ஆங்காங்கே உணவு தயாரித்து சாப்பிட்டு, வாகனத்திலேயே தங்கி, தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தின சாமி, இந்த இயக்கத்துக்கு தலைமை யேற்று திட்டமிட்டு வழி நடத்தி வருகிறார். சந்திக்கும் மக்களிடம் ரூ.10 மட்டுமே நன்கொடையாக வாங்கும் இந்தத் திட்டத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் நன்கொடை வழங்குவதோடு கழக வெளியீடுகளையும் வாங்கி வருகிறார்கள். வெற்றி நடைபோடும் மக்க சந்திப்பு திட்டம் பற்றிய செய்தி தொகுப்பு: மே 22, 2014 : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தை, கரூரில் 22.5.2014 காலை 11 மணிக்கு மூத்த பெரியார் தொண்டர்...

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு இயக்கம், ஜூன் 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் கோவை காந்திபுரத்தில் தொடங்கியது. கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட தலைவர் நேரு உள்ளிட்ட 20 தோழர்கள் இயக்கத்தில் பங்கேற்றனர். கோவை நகரம் முழுதும் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, கழக நூல்களை விற்பனை செய்து வருகின்றனர். கழகத்தின் முயற்சியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் என்று நன்கொடை திரட்டப்படுகிறது. 100 ரூபாய் நன்கொடை தருவோருக்கு 20 ரூபாய்க்கான நூல்கள் வழங்கப்படுகின்றன. ஜூலை 4 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் தொடருகிறது. 4 ஆம் தேதி மேட்டுப் பாளையத்தில் நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. 15.6.2014 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களை உக்கடம்பகுதியில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். அன்று மாலை கோவையில் நடந்த மறைந்த நடிகர் மணிவண்ணன் நூல்...