Tagged: மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தவுடன் மாட்டிறைச்சிக்கு முழுமையான தடை விதித்தது. மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக ஒரு புகார் வந்தால் அதற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ள முடியும் என்ற அளவுக்கு உணவு உரிமைக்கே சவால் விட்டது அந்த சட்டம். மாடுகளை வெட்டக் கூடாது; வீட்டில் மாட்டிறைச் சியையும் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் கூறியது. ஏதோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பா.ஜ.க. கருதியது. உண்மை என்னவென்றால் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி. மிகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய புரதச் சத்துணவு. சட்டமன்றத் தேர்தல்களில் தலித் மக்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் பா.ஜ.க., தலித் மக்களின் உணவு உரிமைக்கு தடை போட்டு பார்ப்பனிய உணவு கலாச்சாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கிறது. பார்ப்பனர்களே மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள்தான். புத்தர் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பார்ப்பனர்களே மாட்டிறைச்சி...

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா, மராட்டிய சட்டமன்றத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவேறியது. நரபலி தருவது, பில்லி சூன்யம் மந்திரிப்பது, நோய் தீர்க்க மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மகாராஷ்டிர மேலவையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். பகுத்தறிவாளர் நரேந்திர தபோக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவசர சட்டமாக – இதை மகாராஷ்டிர அரசு பிறப்பித் திருந்தது. இப்போது சட்டசபையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது. மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற இந்து மத அமைப்புகள் இந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதில் பெரும்பாலான திருத்தங்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, சோதிடம், வா°து சா°திரம் போன்ற மூடநம்பிக்கைகள், மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய...