Tagged: போர்க் குற்றங்கள்

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

மீண்டும் மார்ச் மாதம் அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரப் போவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்ற இரண்டு கேள்விகளுக்குள் பிரச்சினைகளை முடித்து விடுவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அமெரிக்க தீர்மானத்தின் உள்ளடக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டியது அவசியமாகும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்து முடிந்த வுடனேயே 2009இல் அய்.நா. மனித உரிமைக் குழுவில் சுவிட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம், இனப்படுகொலை என்றுகூட குறிப்பிடப்படவில்லை. மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. அந்தத் தீர்மானத்தை முடக்கி தோல்வியடையச் செய்வதில் இந்தியா, அய்.நா.வில் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு இலங்கைக்காக ஆதரவைக் கேட்டது. தீர்மானத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசு, “பயங்கரவாதத்தை” ஒழித்துவிட்டதைப் பாராட்டி, ஒரு பாராட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தது. அய்.நா.வில் அத்தீர்மானம் நிறைவேறியது. 2012 ஆம் ஆண்டில் அய்.நா.வில்...

இனப்படுகொலைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கலந்தாய்வு

இனப்படுகொலைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கலந்தாய்வு

இராஜஸ்தான், கருநாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் மனித உரிமை அமைபபுகள் சென்னையில் மார்ச் 8, 9 தேதிகளில் கூடி தூக்குத் தண்டனை ஒழிப்பு மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து விவாதித்து, இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் செயல் திட்டங்களை வகுத்தன. இந்திய அரசு மரணதண்டனை முழுவதுமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதில் நம்பிக்கையுள்ள தேசிய மாநில கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்த வேண்டும் என்று கூட்டத்தின் முடிவில் வேண்டுகோள் விடப்பட்டது. கருணை மனு காலதாமதத்தின் அடிப்படையில் 15 தூக்குத் தண்டனை கைதிகளை உச்சநீதிமன்றம் விடுவித்து அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மனித உரிமைக் குழுக்கள் வரவேற்றன. இரண்டாம் நாள், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள்; அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவு தீர்மானம் குறித்து, பிரதிநிதிகள் விரிவாக விவாதித்தனர். தமிழர் பிரச்சினை என்ற...

தலையங்கம்: ஏமாற்றம்தான்; ஆனாலும்…

தலையங்கம்: ஏமாற்றம்தான்; ஆனாலும்…

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மாந்தநேயத்துக்கு எதிரான குற்றங்களை தனக்குத் தானே இலங்கை அரசு விசாரிக்கும் நாடகத்துக்கு இம்முறையாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற சர்வதேச தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்துள்ளது. அய்.நா.வின் 25ஆவது மனித உரிமை மன்றத்தில் இங்கிலாந்து, மொரிசியசு, மான்டி நிக்ரோ, மாசிடோனியா நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம், கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசு, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, இராணுவத்தையும் சிங்கள மக்களையும் குடியேற்றி வருவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை செயல்பட முடியாத நிலைக்கு முடக்கி வைத்து விட்டது. மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதிலிருந்து அன்றாட சிவில் நிர்வாகம் வரை இராணுவம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது. இந்த நிலையில் சர்வதேச நேரடிக் கண் காணிப்புக்கு உடனடியாக இலங்கை அரசு உட்படுத்தப்படா விட்டால், தமிழர் நில ஆக்கிரமிப்புகள் மேலும் தீவிரமாகிவிடும் என்ற நியாயமான அச்சம்...