Tagged: போர்க்குற்ற விசாரணை

அய்.நா. என்ன செய்யப் போகிறது? – பூங்குழலி போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் புதிய சதி

எதிர்வரும் மார்ச் மாதம் அய்.நா.வில் மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சனை விவாததக்கு வரவிருக்கிறது. இலங்கை அரங்கேற்றி வரும் சூழ்ச்சிகளையும், தமிழர்கள் நிகழ்த்த வேண்டிய எதிர்விளைவுகளையும் அலசுகிறது இந்த ஆய்வு. அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. 28.1.2017 அன்று வெளியான அச்செய்திக் கட்டுரையில் கட்டுரையாளர் மீரா சீனிவாசன், இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனை கொல்வதற்காக முன்னாள் போராளிகள் போட்டசதித் திட்டம் அம்பலமாகியிருப்பதாககூறுகிறார்.இதேநாளில் இதே செய்தி கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் இதழிலிலும் கட்டுரையாக வெளிவருகிறது. ஏற்கெனவே இது தொடர்பில் 4 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர். திடீரென தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி வருவதும் அதற்காக உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து நால்வரை கைது செய்திருப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. ஜோசப்பரராஜசிங்கத்தைஅவர்நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே ஒரு கிறிஸ்துமஸ் நாளில் சர்ச்சுக்குள் வைத்தே...