Tagged: பெரியார் தமிழ் தேசியம்

கொளத்தூர் மணி பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3) சுயமரியாதை திருமணத்துக்கு தமிழ் திருமண முறை மாற்றாக முடியுமா?

கொளத்தூர் மணி பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3) சுயமரியாதை திருமணத்துக்கு தமிழ் திருமண முறை மாற்றாக முடியுமா?

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)   சுயமரியாதைத் திருமணம் என்பதை பெரியார் அறிமுகப்படுத்தினார். பார்ப்பன புரோகித விலக்கு,           பெண்ணடிமை விலக்கு என்பதெல்லாம் சேர்த்து தான் சுயமரியாதை திருமணம். பெரியாருடன் இந்தி      எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்ற சைவர்கள் போராட்டம் முடிந்தவுடன் 1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் தமிழர் திருமண மாநாடு கூட்டினார்கள். அங்கு தமிழ்த் திருமண முறை என்று ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள். பொதுவாக தமிழர்கள் என்பதில் நாம் வைத்திருக்கும் பொருள் என்னவென்றால் வெள்ளாள மனப் பான்மை உடையவர்கள். அந்த உடை, அந்த உணவு உண்பவர்கள் என்பதுதான். யார் தமிழர்? உங்களுடைய அடையாளமெல்லாம் யாரைக் குறிக்கிறது? வேட்டிதான் தமிழர் உடையென்றால் இன்றைக்கு கிராமத்தில் யாரும் வெள்ளை வேட்டி அணிவதில்லை, லுங்கிதான் அணிகிறார்கள். லுங்கி இப்போது வந்திருக்கலாம். அதுதான் அவர்களுக்கு வசதியாக உள்ளது. இப்போது...