Tagged: பெரியார் சிந்தனைகள்

“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”

“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வே. மீனாட்சி சுந்தரம், ‘மார்க்சிஸ்ட்’ ஏப்ரல் மாத இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். “பகுத்தறிவு சித்தாந்தமும் – தி.மு.க., அ.தி.மு.க. சீரழிவும்” என்பது அக்கட்டுரை தலைப்பு. இக்கட்டுரை பெரியார் நடத்திய சமுதாயப் போராட்டத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கிறது. மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ‘தோழர் ஏ.பி.’ என்று அழைக்கப்பட்ட ஏ.பாலசுப்பிரமணியம், பெரியார் இயக்கம் குறித்து கொண்டிருந்த மதிப்பீடுகளை இக்கட்டுரை பதிவு செய்கிறது. மார்க்சியம் – பெரியாரியத்தை காலத்தின் தேவைக்கேற்ப உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்துகிறது.  முக்கியத்துவம் கருதி, கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.  வாசிப்பை எளிமையாக்க, ஆங்காங்கே கருத்துச் சிதையாமல் சொற்றொடர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  (ஆர்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1857-58 சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு தங்களது நிர்வாக முறையில் மாற்றம் கொண்டுவர இந்திய அரசாங்க சட்டம் என்ற தலைப்பில் ஒரு சட்டமியற்றினர் அன்றைய விக்டோரியா மகாராணியின் மீது இந்திய...