Tagged: பிஜேபி

சங்பரிவாரங்களுக்கு அப்துல் சமது  கேள்வி

சங்பரிவாரங்களுக்கு அப்துல் சமது கேள்வி

இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? “பார்ப்பனருக்கு சேவகம் செய்வதே இந்து ராஷ்டிரம்” என்றார், ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர். “இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார் அப்துல் சமது. கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கின்ற சூழலில் அரசியல் கட்சிகள் எல்லாம் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என ஆளாய் பறந்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டினை இங்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகின்றது.  காவல் துறை அனுமதி மறுத்தும் உயர்நீதிமன்றத்தை அணுகி அதன் அனுமதியோடு இம்மாநாடு நடைபெறுகிறது.  அடுத்த தேர்தலைப் பற்றி யோசிப்பவர்கள் சாதாரண அரசியல்வாதிகள்; ஆனால் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் பெரியார் தொண்டர்கள்.  இதுதான் இம்மாநாட்டின்...

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு !

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ! பாஜக பொறுப்பாளர் கல்யாண ராமன் தொடர்ச்சியாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும்,கலவரத்தை தூண்டும் விதமாகவும்,பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் பேசியும்,சமூக வலை தளங்களில் எழுதி வருவதற்க்காகவும், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருமையிலும், திவிக தோழர்களை கும்பல்கள் என்றும் முகநூலில் பதிவுசெய்த பாஜக கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (10.02.2016) காலை பதினோரு மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் ”இதுபோன்ற நடவடிக்கைகளை கல்யாணராமன் போன்ற பாஜகவினர் தொடர்ந்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்’ என தெரிவித்தார்.