Tagged: பன்னாட்டு விசாரணை

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

மீண்டும் மார்ச் மாதம் அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரப் போவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்ற இரண்டு கேள்விகளுக்குள் பிரச்சினைகளை முடித்து விடுவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அமெரிக்க தீர்மானத்தின் உள்ளடக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டியது அவசியமாகும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்து முடிந்த வுடனேயே 2009இல் அய்.நா. மனித உரிமைக் குழுவில் சுவிட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம், இனப்படுகொலை என்றுகூட குறிப்பிடப்படவில்லை. மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. அந்தத் தீர்மானத்தை முடக்கி தோல்வியடையச் செய்வதில் இந்தியா, அய்.நா.வில் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு இலங்கைக்காக ஆதரவைக் கேட்டது. தீர்மானத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசு, “பயங்கரவாதத்தை” ஒழித்துவிட்டதைப் பாராட்டி, ஒரு பாராட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தது. அய்.நா.வில் அத்தீர்மானம் நிறைவேறியது. 2012 ஆம் ஆண்டில் அய்.நா.வில்...

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

அய்.நா.வின் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் இந்தியா தலையிட்டு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். 24-03-2014 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி, சேவ் தமிழ்ஸ் செந்தில், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட 18 இயக்கங்களை...

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

‘பன்னாட்டு விசாரணை’ குறித்த பல்வேறு தகவல்களை எளிமையாக விளக்குகிறது, இக்கட்டுரை. ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள அய்.நா. பாதுகாப்புச் சபை, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைப் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன. இவையன்றி அய்.நா. பொதுச் செயலர் /அய்.நா. மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன. பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கும்? அய்.நா.வின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும்...