Tagged: பதவி பிரமாணம்

‘கடவுள்’ பெயரால்…

‘கடவுள்’ பெயரால்…

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற 28 அமைச்சர்களும் ‘ஆண்டவன்’ பெயரில் உறுதி ஏற்றனர். தலா 14 பேர் கொண்ட இரண்டு அணிகளாக உறுதி ஏற்றனர். கடவுளை மறுத்து ‘உளமார’ என்று உறுதி ஏற்கும் வாய்ப்பு அமைச்சர்களுக்கு இந்த முறை யினால் மறுக்கப்பட்டது. (அப்படி உளமார உறுதி ஏற்கும் துணிவு எந்த அமைச்சருக்காவது இருக்குமா என்பது வேறு கேள்வி; கடந்த முறை சட்டமன்ற உறுப் பினர்களாக பதவியேற்றபோது ஜோலார்பேட்டை வீரமணி மட்டும் கடவுள் பெயரால் உறுதியேற்கவில்லை என்ற ஒரு செய்தியும் உண்டு) 1967ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவை அமைந்தவுடன் முதன்முதலாக கடவுள் பெயரால் உறுதியேற்கும் முறையை முதல்வர் அண்ணா மாற்றி ‘உளமார’ என்று கூறி உறுதி ஏற்கச் செய்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். தலைமையில் அ.இ. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த  போதும் ‘கடவுள்’ பெயரால் உறுதி ஏற்கவில்லை. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹண்டே போன்ற பார்ப்பனர்கள் மட்டும் கடவுள் பெயரால் உறுதி ஏற்றனர். கடவுள்,...