Tagged: பச்சையப்பன் கல்லூரி

‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது. சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது. தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித் தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற் கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனை யாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது....

சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின்  மூன்றாவது ஆண்டுவிழா  வாலிபர்களும் பொதுசேவையும்  ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம்  ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?

சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் மூன்றாவது ஆண்டுவிழா வாலிபர்களும் பொதுசேவையும் ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம் ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?

ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம் ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்? தோழர்களே! இந்த சுயமரியாதை வாலிப சங்க ஆண்டு விழாவுக்கு நானே தலைமை வகிக்க வேண்டுமென்று விரும்பியழைத்த எனது வாலிப தோழருக்கு முதல் நன்றி செலுத்துகிறேன். இப்போது என்னை இங்கு தலைமை வகிக்க பிரேரேபித்த தோழர் இ.ஈ. நாயகம் அவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள். அப்புகழ்ச்சி சகிக்கமுடியாததும் எனக்கு வெட்கத்தை உண்டாக்கக் கூடியதாகவுமே இருந்தது. நான் செய்திருப்பதாகச் சொல்லப்படும் காரியங்களில் எதிலும் தோழர் நாயகம் பின்னடைந்தவரல்ல. அவர்களது ஆசை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை எதுவும் எவ்வகையாலும் குறைந்ததல்ல. ஆதலால் அப்படிப்பட்ட பெரியார் என்னைப் புகழ்வது என்றால் அது அதிகம் என்று சொல்லாமலிருக்க முடியவில்லை. அன்றியும் நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் புகழ்வது என்பதும் பரிகாசத்துக்கு இடமானதேயாகும். ஆனாலும் அவர்களுடைய அன்புக்கு நான் பாத்திரனாக ஆக்கிக் கொள்ளப்பட்டேனே என்கின்ற முறையில் நன்றி செலுத்துகிறேன்.   வாலிபர்கள் பெருமை தோழர்களே இன்று...