Tagged: நீதிபதி நியமனம்

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி மறுப்பு

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் அக்டோபர் 5ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.   இதில் 3ரூ மக்கள் தொகை கொண்ட  பார்ப்பனர்கள் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், விவரம் பின்வருமாறு: டாக்டர் அனிதா சுமந்த், ஆர்.சுப்பிரமணியன், சி.வி.கார்த்திகேயன் ஆகிய மூன்று பார்ப்பனர்கள்(20ரூ) தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கௌல் உட்பட  மொத்தமுள்ள 54 நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர் என்பது ஏறக்குறைய 17 சதவீதம் பேர். அதிலும் அனிதா சுமந்திற்கு வயது 45 தான் ஆகிறது அவர் உச்ச நீதிமன்றம் வரை செல்லக்கூடிய வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால் பிற்படுத்தப்பட்ட நீதிபதிகள் வயதோ 55க்கும் மேலாகிவிட்டது. 150 ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க நீதிமன்றத்தில் இதுவரை தேர்ந்தெடுக்கப்படாத சமூகப் பிரிவுகள் ஏராளம், ஏராளம். ஆகவே உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைபிடிக்க வேண்டும் என்று கோருவதே சரியாக இருக்கும். இந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரை ஒரு பிறன்மலை கள்ளர்கூட...