Tagged: நிதி தாரீர்

நிதி தாரீர் ! “வேத மரபு மறுப்பு மாநாட்டிற்காக…….”

  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வரும் 24.12.2016 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வேத மரபு மறுப்பு மாநாடு சேலம், நேரு கலையரங்கம், போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. கருத்தரங்கம்- பேரணி – கலை நிகழ்ச்சி – பொது மாநாடு என ஒரு நாள் முழுவதும் நடைபெற உள்ள மாநாட்டிற்கான பணியில் கழகத் தோழர்கள் இரவு,பகலாக பணி செய்து வருகிறார்கள். மாநாட்டு பணிக்கான நிதியை கழக ஆதரவாளர்களிடம் பொது மக்களிடம் அணுகி திரட்டியும் கழகத் தோழர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தியும் பணியைத் தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் மத்திய பா.ஜ.க அரசின் திடீர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மாநாட்டு பணிக்கான நிதி திரட்டும் பணி நெருக்கடியை சந்தித்துள்ளது. இம்மாநாட்டில் கழகம் வேத மரபிற்கெதிராக ஒரு புதிய அணிச்சேர்க்கையை முன்மொழிகிறது. இது பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேத மரபிற்கெதிரான கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் கூட பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து...