Tagged: நடைபாதை கோயில்கள்

தமிழக அரசே! உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடைபாதைக் கோயில்களை அகற்று! கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகை

தமிழக அரசே! உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடைபாதைக் கோயில்களை அகற்று! கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகை

உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து தமிழக அரசு நடைபாதைக்  கோயில்களை அகற்ற வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. திருப்பூரில் : திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் 28.04.2016 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக மாநகர தலைவர் நீதிராசன் தலைமையில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “சட்ட விரோதமான நடைபாதைக் கோயில்களை அகற்று! உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் கால தாமதப்படுத்தாதே!” என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் முகில்ராசு, பல்லடம் நகர தலைவர் கோவிந்தராசு, ஒன்றிய தலைவர் சண்முகம், சூலூர் பன்னீர்செல்வம்,  அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, அகிலன், மாதவன், முத்து....