Tagged: தென்கலை

ஓயாத வடகலை, தென்கலை ‘குடுமி பிடி’

காஞ்சிபுரம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று பார்ப்பனர்கள் ‘குடுமி’பிடிச் சண்டை போட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு இலண்டனில் உள்ள ‘பிரிவீ கவுன்சில்’ வரை போனது. ஒரு வாரம் வடகலை நாமத்தையும் மறுவாரம் தென்கலை நாமத்தையும் மாற்றி மாற்றிப் போடுமாறு தீர்ப்பு வந்தது. இதே போல் திருவரங்கம் கோயில் யானைக்கும் பிரச்சினை வந்தது. யானைக்கு நாமத்தை மாற்றி மாற்றிப் போட்டதால் நெற்றிப் புண் உண்டாகி யானையே மரணமடைந்து விட்டது என்ற செய்தியும் உண்டு. இந்த ‘நாம’ப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. திருப்பதி ‘ஏழுமலை’யானுக்கும் இதே பிரச்சினைதான்! தென்கலை நாமம் (‘ஒய்’ எழுத்து), வடகலை நாமம் (‘யு’ எழுத்து). இரண்டுமே ஏழுமலையானுக்கு சாத்துவதுஇல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பொது அடையாளத்தை ‘நாமமாக’ போடுகிறார்கள். தமிழில் ‘ப’ எழுத்து வடிவத்தில் போடப்படுகிறது. இந்த முடிவில் இப்போது மீண்டும் குழப்பம் வந்துள்ளதாம். கடந்த நவம்பர்...

வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வைணவத்தில் வடகலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும், தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும் இடையிலான மோதல் இன்றும் தீர்ந்தபாடில்லை. கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ளது புகழ் பெற்ற தேவநாத சாமி கோயில். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இக் கோயிலின் வடக்கு பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனிகள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் உற்சவம் நடத்தப் படும். இந்த உற்சவத்தின்போது காலையிலும் மாலையிலும் மணவாள மாமுனிகள் வீதி உலா புறப்படும், அந்த உலா தேவநாத சாமி கோயிலைச் சுற்றி வரும். மாமுனிகள் வீதி உலா வரும்போது தேவநாத சாமி கோயில் பார்ப்பனர்கள் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாள் போட்டு விடுகின்றனர். மணவாள மாமுனிகள் சாமியும் அந்த சாமியோடு வருபவர்களும் தேவநாத சாமியைப் பார்க்கக் கூடாதாம். பார்த்தால் தீட்டாம்! இப்படி ஒரு தீண்டாமை பல ஆண்டுகளாக நிலவுகிறது. மாமுனிகள் தரப்பினர் எவ்வளவோ முயன்றும் கதவு மூடப்படுவதைத்...