Tagged: தூக்குத் தண்டனை

தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுதும் வலிமைப் பெற்றுவரும் சூழலில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கை ஒளியைத் தருகிறது. கருணை மனுவுக்கு விண்ணப்பித்து நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த 15 தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மனித உரிமை வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோரடங்கிய அமர்வு வழங்கியுள்ளஇந்த தீர்ப்பு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நிலவிய குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த சைமன், மாதையன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோர், இந்தத் தீர்ப்பின் வழியாக தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது ஆறுதலைத் தருகிறது. 8 ஆண்டுகள் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, ‘தடா’ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டயைக் குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்...

தூக்குத் தண்டனையை ஒழிக்க சட்ட வாரியம் கருத்து கேட்கிறது

தூக்குத் தண்டனையை ஒழிக்க சட்ட வாரியம் கருத்து கேட்கிறது

இந்தியாவில் ‘தூக்குத் தண்டனை’யை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கடந்த மே 23 ஆம் தேதி சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தூக்குத் தண்டனைக் குறித்து விரிவான ஆய்வுகள், விவாதங்கள் தேவை. இந்த விவாதங்களும் ஆய்வுகளும் சட்டத்தை உருவாக்குவோருக்கும் நீதித்துறைக்கும் பயன்பெறத்தக்க வகையில் உதவிட வேண்டும். தூக்குத் தண்டனைக்கு எதிராக உருவாகி வரும் சர்வதேசப் போக்கினைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதை சுட்டிக் காட்டும் இந்த அறிக்கை, இந்த தண்டனையை வழங்குவதில் ஒரே சீரான அணுகுமுறை மேற்கொள்ளப்படாததை சுட்டிக் காட்டியுள்ளது. சட்ட ஆணையம் இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல நேரங்களில் உச்சநீதிமன்றமே பரிந்துரைத்துள்ளது. கருணை மனுக்களை பரிசீலிப்பதில் நீண்ட காலதாமதம் செய்வது உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்ற...

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து, தமிழக அரசின் விடுதலை முயற்சி, தன் தாய் அற்புதம்மாளின் போராட்டம் பற்றி பல கேள்விகளுக்கு வழக்கறிஞர் மூலம் விடை அளிக்கிறார். அரசியல் சாசன அமர்விற்கு உங்கள் விடுதலை வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? அரசியல் சாசன அமர்வில் நீதியரசர்கள் யார் யார் பங்கு பெறப் போகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருப்பினும் தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு இதில் எவ்வகையான நிலைப்பாடு எடுக்க உள்ளது என்பதையே நான் மிக ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். காரணம் தண்டனை குறைப்பு அதிகாரம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என நன்கு தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக சென்ற காங்கிரசு மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்தது – வழக்கு தொடுத்தது. தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு மாநில உரிமைகளை மதிக்கிற அரசாக...