Tagged: தீக்கதிர்

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

கருந்திணை தயாரிப்பில் தோழர் பூங்குழலி இயக்கத்தில் உருவான “தீவரைவு” ஆவணப் படத்தின் திரையிடல் கடந்த 9-05-2014, வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடைபெற்றது. நமது பண்பாட்டில் உறவுகளை நிலை நிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்கு வதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக் கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல் ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கி வருகிறது. தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்று வரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம். கருந்திணையும் பனுவலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், இந்த...

‘நோக்கியா’ சுரண்டலுக்கு துணை போகும் ஆட்சிகள்

‘நோக்கியா’ சுரண்டலுக்கு துணை போகும் ஆட்சிகள்

இந்தியாவில் அந்நிய முதலீடு நுழைய முடியாத துறையை காண்பது இன்று அபூர்வம். தொழில்துறை, நிதித் துறை, சில்லரை வர்த்தகம் என எல்லா முக்கியத் துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை நுழைத்து கொள்ளையடித்து வருகிறது அந்நிய முதலீடு. இப்போக்கு வளர்ச்சியின் குறியீடாக இங்கு உருவகப்படுத்தப் பட்டுள்ளது. ஏராளமான சலுகைகள், அடிமாட்டு விலைக்கு நிலம், வரிச் சலுகைகள் என இந்திய மக்களின் செல்வ வளம் வாரியிறைக்கப்படு கிறது. அந்நிய முதலீடுகள் மீது கட்டுப் பாடற்ற சுதந்திர போக்கு மத்திய, மாநில அரசுகளால் கையாளப்படு கிறது. இவர்களின் எதிர்பார்ப்பின்படி இம் முதலீடுகள் நாட்டை வளமாக்க வில்லை. மாறாக இந்திய அரசு அளிக்கும் அத்துனை சலுகைகளை யும் அனுபவிப்பதோடு, சட்ட விரோதமான வழிகளிலும் நாட்டின் வளங்களை கொள்ளையடிக் கிறார்கள் என்பதை “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை போல நோக்கியா இந்தியா நிறுவன விவகாரங்களை கொண்டே விளங்க முடியும். தமிழக அரசின் ஒப்பந்தம் ஏப்ரல் 2005இல்...