Tagged: திரு.வி.க.

மண்ணை மணந்த மணாளர் பெரியார்

மண்ணை மணந்த மணாளர் பெரியார்

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம் பெற்றுள்ள தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை. இதற்கு விளக்கம் கேட்ட தோழர்களிடம், ‘தமிழகத் தலைவர்கள் – தமிழுக்காக உழைத்தவர்கள் – தமிழ் எழுத்தாளர்கள் – தமிழ்ப் பேச்சாளர்கள்’ என்ற நான்கு வகைப்படுத்தலிலும்  பெரியார் எதிலும் இடம் பெறவில்லை என்று அமைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்ட தாம். பெரியாருக்கு சான்றிதழ்களை வழங்கும் உரிமைகளை இவர்களே கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விழாவில் பேசிய மருத்துவர் இனியன் இளங்கோ, தனது உரையிலேயே பெரியார் புறக்கணிப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார். பெரியார் பேச்சு-எழுத்து பற்றி ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ வ.ரா. என்று அழைக்கப்படும் ராகவ அய்யங்கார், ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, திரு.வி.க. ஆகியோரின் கருத்துகளை இங்கு பதிவு செய்கிறோம். வ.ரா. எழுதுகிறார் “தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்; சுவாமியைக் குப்புறப் போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைக் காட்டிலும் பழுத்த நாத்திகன் வேறு எவருமே இருக்க முடியாது....