Tagged: திருவாரூர்

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் டிசம்பர் 4 அன்று திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாநில பொருளாளர் ஈரோடு ரெத்தினசாமி, செயலவை தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர்கள் 7 பேரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததையும், இச் சம்பவங்களில் தொடர்பில்லாத கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், பாய்ச்சப்பட்டதற்கும் திருவாரூர் மாவட்ட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கழக ஒன்றிய செயலாளர்கள் மன்னை சேரன், ரமேஷ், நீடா நல்லிக் கோட்டை முருகன், வலங்கைமான் செந்தமிழன், கோட்டூர் அனுராசு, திருவாரூர் கலைவேந்தன், நகர செயலாளர்கள் கரிகாலன், பிரபாகரன், கலைவாணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்....

திருவாரூர் மத்திய பல்கலையில் பார்ப்பன ஆதிக்கம்

திருவாரூர் மத்திய பல்கலையில் பார்ப்பன ஆதிக்கம்

நாட்டின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே தலைவிரித்தாடுகிறது. திருவாரூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் இதே நிலைதான்! முன்னாள் துணைவேந்தர் டாக்டா சஞ்சய் – பார்ப்பனர், இப்போதைய பதிவாளர் வி.கே. சிறீதர் – பார்ப்பனர், நிதி அதிகாரி பி.வி.இரவி – பார்ப்பனர், துணைப் பதிவாளர் வெங்கடேசன் – பார்ப்பனர் துணைவேந்தரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றோரும் பார்ப்பனர்களே! டாக்டர் ஜி.கே. ஜெயராமன் – கன்னட பார்ப்பனர், சி.ஆர். கேசவன் – பார்ப்பனர், கோபாலகிருஷ்ணகாந்தி – பார்ப்பனர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சி.ஆர். கேசவன் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். முன்னாள் துணைவேந்தர் வி.சி. சஞ்சய், மீண்டும் துணை வேந்தராக நுழையும் நோக்கத்தோடு தனக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளார்.