Tagged: திருஞானசம்பந்தர்

சோதிடத்தை மறுத்த கடவுள் நம்பிக்கையாளர்கள்

கடவுள் நம்பிக்கையாளர்களே சோதிடத்தை நம்ப மறுக்கிறார்கள் – சோதிடம் ஒரு மோசடி என்று கூறியிருக்கிறார்கள்.   அப்துல் கலாம் : இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் தனது பதவிக் காலத்தை மக்களின்  பாராட்டுகளோடு முடித்துக் காட்டினார். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் அப்துல் கலாம். குடியரசுத் தலைவர் பதவிக்கு  அவரை வாஜ்பாய்பிரதமராக இருந்த பா.ஜ.க. ஆட்சி தேர்வு  செய்த போது கூட பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான பொறுப்பு மத்திய அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைச்சர் எந்த நாளில் பதவியேற்பு  விழாவை வைத்துக் கொள்ளலாம்; சோதிடப்படி உங்களுக்கு  ‘நாள் நட்சத்திரத்திற்கு’ ஏற்ற நல்ல நாள் எது என்று கேட்டார். அதற்கு அப்துல்கலாம் இவ்வாறு பதில் அளித்தார். “பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது சூரியனையும் சுற்றிக் கொண்டி ருக்கிறது. காலம், நேரம் இரண்டுக்குமே இந்த சுழற்சிதான் காரணம். என்னைப் பொறுத்தளவில் எல்லா நாள்களும் நல்ல...