Tagged: தாமிரபரணி

மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

‘நெல்லை தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை’யும் ஐந்திணைத் தொண்டு நிறுவனமும், ஊர்க்காவல் படையினருடன் இணைந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்தபோது ஆற்று மணலில் புதையுண்டுக் கிடந்த சுமார் 125 டன் அழுக்குத் துணிகளை வெளியே எடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் வீசி எறிந்தவை. இதில் பட்டுச் சேலை, வேட்டிகளே அதிகம். இதுபோன்ற அழுக்குத் துணி மற்றும் பூஜைப் பொருட்களால் ஆற்று நீர் கடுமையாக மாசுபடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி, சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இதனால் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் மாசுபட்டு பிற உயிரினங்கள் வாழ லாயக்கற்றதாகப் போய் விட்டது. நீரின் மேல் எண்ணெய்ப் படலம் தேங்கி நிற்பதால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மீன், தவளைகள் அழிந்து போகின்றன. தண்ணீருக்குள் கிடக்கும் உடைந்த பாட்டில்களால் தினமும் பத்து பேருக்காவது ரத்தக் காயம் ஏற்படுவது தவிர்க்க...

வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்

வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை: தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பன்னாட்டு குளிர்பான ஆலையை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உள்பட பலர் கொடுங்காயம் அடைந்துள்ளனர். காவல்துறை யின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுவாக பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக் காகவோ, போக்குவரத்து வசதிகளுக்காகவோ, சுகாதாரச் சீர்கேடுகளுக்காகவோ, குடிமைப் பொருட் களுக்காகவோ போராட்டம் நடத்தினால் அதற்குரிய அதிகாரிகள் தான் வந்து பேசி சமரசம் செய்வார்கள். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் காவல்துறை மட்டுமே வந்து மக்களிடம் பேசுவதும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையினை நிகழ்த்து வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தமிழகத்தை ஆளும்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின்...