Tagged: சுயமரியாதை இயக்கம்

போராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம் – முனைவர் ச. ஆனந்தி

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய அம்சம் – அந்த இயக்கம் நடத்திய மாநாடுகளாகும். மாநில அளவிலும் – மாவட்ட அளவிலும் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளன, கொள்கை முழக்கங்களோடு ஊர்வலம் – சுயமரியாதைஇயக்கத்தின்கொள்கைளை விளக்கிடும் நீண்ட பேருரைகள் – பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த விரிவான தீர்மானங்கள் ஆகியவை இந்த மாநாடுகளின் தனிச்சிறப்புகள். பெண்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும், பெண்களை பொதுவாழ்வில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடுளை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறது. முதல் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு 1929 இல் சென்னை அருகே செங்கல்பட்டில் நடந்தது மாநாட்டில் சைமன் கமிஷன் சாதிய ஒடுக்குமுறை, மத நிறுவனங்களின் சுரண்டல் பற்றி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு திருமணம் மற்றும் மதச்சடங்குகள் பற்றி விசேட கவனம் செலுத்தி இந்த மாநாடு பரிசீலித்தது. அது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்பது...

அடக்குமுறைகளை எதிர்கொண்ட சுயமரியாதை இயக்கம்

அடக்குமுறைகளை எதிர்கொண்ட சுயமரியாதை இயக்கம்

நாகம்மையார் மறைவு ; கிறிஸ்துவ திருமணம் ; நிலவிய சூழல்: 15-05-2014, 22-05-2014 ஆகிய நாள்களிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நாகம்மையார் மறைவு – அடுத்து தடையை மீறி நடத்தப்பட்ட கிறிஸ்துவர் சுயமரியாதைத் திருமணம் – அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ‘கத்தோலிக்கர்களே, இனி பலிக்காது’ என்ற கட்டுரை ஆகியவற்றை வெளியிட்டிருந்தோம். இவை தொடர்பான வேறு சிலவற்றையும், அதாவது அந்த நாட்களில் நிலவி வந்த சமூக, அரசியல் சூழல்களையும் சற்று நோக்குவோம். அப்போது நாட்டை ஆண்டு வந்த ஆங்கில அரசு சில ஆண்டுகளாகவே பொதுவுடைமைக் கருத்துப் பரவலுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடங்கியிருந்தது. 1929 ஆம் ஆண்டே எஸ்.ஏ.டாங்கே, அதிகாரி, தேசாய் முதலிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் 32 பேர்கள் மீது “இந்தியாவில் பிரிட்டிஷ் மன்னரின் ஆட்சியைக் கவிழ்க்க” சதி செய்ததாக வழக்குத் தொடுத்திருந்தது. “மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு” என்று அறியப்பட்ட அவ்வழக்கு ஏறத்தாழ நான்காண்டுகள் நடைபெற்று, அவ்வழக்கில் இருந்தோரில் 5 பேர்களை விடுதலை...