Tagged: சி.பி.எம்.

கழக செயலவையின் முடிவுகள்

கழக செயலவையின் முடிவுகள்

‘இந்துத்துவ சக்தி’களை எப்போதுமே எதிர்த்து வரும் சி.பி.அய். – சி.பி.எம். – இஸ்லாமிய கட்சிகள் – ‘விடுதலை சிறுத்தை’களை ஆதரிக்க வாக்காளர்களுக்கு ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ வேண்டுகோள் ஜாதி வெறியின் குறியீட்டு அடையாளமாக தர்மபுரியில் பா.ம.க. வேட்பாளரை தோற்கடிப்பீர்! கழக செயலவையின் முடிவுகள் மயிலாடுதுறையில் மார்ச் 29, 2014 இல் கூடிய கழக செயலவையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தல் நிலைப்பாடு ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும் அதன் அரசியல் முகமான பா.ஜ.க.வும், இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பெரும் தொழில் நிறுவனங்களின் பின்பலத்தோடு நாடாளுமன்ற தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளன. பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களையும், பல்வேறு பண்பாடுகளையும் கொண்ட நாட்டில் “ஒரே நாடு-ஒரே பண்பாடு” என்ற ஒற்றை அடையாளத்தைத் திணிப்பதே இவர்களின் இலட்சியம் என்பதை கடந்தகால வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன. தங்களின் பாசிச அடையாளத்தை மறைத்துக் கொண்டு ‘வளர்ச்சி’ என்ற பொய்...