Tagged: சிங்களக் கடற்படை

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை 31032016 சென்னை

தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் யாவும் ஒருமனதாக ஏற்று வலியுறுத்தவும், அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம்பெறச் செய்யவும் பின்வரும் கோரிக்கைகளைத்  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் முன்மொழிகிறோம். கோரிக்கைகள்: 1)                  இராசீவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தைந்து ஆண்டு காலமாகச் சிறையில் வாடி வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் தமிழக அரசே அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனே விடுதலை செய்ய வேண்டும். கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்துக்கு மேல் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட இசுலாமியர்கள் என்பதற்காகவே எவ்விதத் தண்டனைக் குறைப்பும் தண்டனைக் கழிவும் வழங்கப் பெறாமல் தமிழகச் சிறைகளில் விடுதலை வாய்ப்பே இல்லாமல் அடைபட்டுக் கிடக்கும் இசுலாமிய சிறைக்கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். குற்ற நடைமுறைச்சட்டத்தின்...