Tagged: சர்வதேச நிதியம்

வெளிநாடுகளுக்கு ஓடும் பார்ப்பன அதிகார வர்க்கம்!

வெளிநாடுகளுக்கு ஓடும் பார்ப்பன அதிகார வர்க்கம்!

டெல்லியில் அதிகார மய்யங்களில் அதிகார சக்திகளாக செயல்பட்ட பார்ப்பன உயர்ஜாதி அதிகாரக் கும்பல், ஆட்சி மாற்றம் வரப் போவதை உணர்ந்து, உலக வங்கி, சர்வதேச நிதியம், வெளிநாட்டுத் தூதரகங்களில் தங்கள் பதவியை உறுதி செய்து கொண்டுள்ளன. அதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டார்கள். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மே 9, 2014) வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அமைச்சகங்கள் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்கள், கூடு தாவும் பறவைகளாகி விட்டனர். உதாரணமாக, பிரதமரின் தனிச் செயலாளராக இருந்த இந்து சேகர் சதுர்வேதி, இப்போது வாஷிங்டனில் அய்.எம்.எப். எனும் சர்வதேச நிதியத்தில் ஆலோசகர் பதவிக்குப் போய்விட்டார். அன்னிய முதலீட்டு ஆலோசனை துறையின் கூடுதல் செயலாளராக இருந்த அஞ்சலி பிரசாத், ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனத்தின் தூதர் பதவிக்குப் போய்விட்டார். அரசாங்கத்தின் தலைமைச் செய்தி தொடர்பாளராக இருந்த நீலம் கபூர், லண்டனில் உள்ள நேரு மய்யத்தில் முக்கிய...