Tagged: காவல்துறை கட்டுப்பாடுகள்

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலத்தை, குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்பட காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்; இரசாயனம் பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தின்போது மின் கம்பம் மற்றும் பாலத்தின்மீது மோதி சிலைகளை பாதிப்பு ஏற்படும் என்பதால், உயரமான சிலைகள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் திடீர் கோவில்கள் அமைத்தல் கூடாது. சிலை அமைப்பாளர்களின் பெயர், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்களை காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். அலைபேசியை அணைத்து வைக்காமல் இருக்க வேண்டும். காவல் துறை அனுமதித்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். சிலை வைக்க, கீற்று அல்லது துணியால் வேயப்பட்ட கொட்டகையாக இருக்கக் கூடாது. கல்நார் அல்லது இரும்பு தகடு பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கடலில் கரைக்க வேண்டும். ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும்....