Tagged: காவல்துறை

காவல்துறையின் இழிவான அறிவிப்பு: அரசியல் சட்டமும் மனு சாஸ்திரமும் ஒன்றுதானாம்!

காவல்துறையின் இழிவான அறிவிப்பு: அரசியல் சட்டமும் மனு சாஸ்திரமும் ஒன்றுதானாம்!

மோடி எதிர்ப்பு பரப்புரைக்கு சென்னை மாவட்டக் கழக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பணிக்கான காவல் உதவி ஆணை யாளர், இதற்கான அனுமதி வழங்கும் ஆணையில், கூட்டத்துக்கான அனுமதிக்கு நிபந்தனையாக, “மனு சாஸ்திர புத்தகம் மற்றும் சட்டப் புத்தகங்களை எரிக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அரசியல் சட்டத்துக்கு சமமானது-மனு சாஸ்திரம்” என்று கூறுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சட்டத்தின் முன் அவைரும் சமம் என்று சட்டம் எழுதி வைத்துக் கொண்டு சமூகத்தில் ‘பிராமணன்’ மேலானவன், ‘சூத்திரன்’ இழிவானவன் என்று கூறும் மனு சாஸ்திரத்தை சட்டத்துக்கு சமமானதாகக் கருதுகிறது, காவல்துறை. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தின் தாக்கத்தை அரசின் இந்த ஆணையில் காண முடிகிறது. ஆனாலும், தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பது தமிழினத்தையே அவமதிப்பதாகும். பெரியார் முழக்கம் 10042014 இதழ்

காதலர்களைப் பிரித்து தற்கொலைக்குத் தூண்டிய வன்முறைக் கும்பல் மீது தாரமங்கலம் காவல்துறை நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

காதலர்களைப் பிரித்து தற்கொலைக்குத் தூண்டிய வன்முறைக் கும்பல் மீது தாரமங்கலம் காவல்துறை நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த தெசவிளக்கு கிராமம் லட்சுமாயூரைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி கிளீனராக இருக்கிறார். இவரது மனைவி மகேஸ்வரி ( 35). இவர்களது மகள் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் விஸ்வநாதனின் மகனும், ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருபவருமான சந்தோஷ் என்ற சாமிநாதன் சுமதியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் விஸ்வநாதன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று வசதியான வீட்டு பிள்ளையை மயக்குகிறாயா என்று கேட்டுள்ளனர். இதனால் மாணவி சாமிநாதனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். 22-04-2014 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாணவி வீட்டுக்கு சென்ற சாமிநாதன் ஏன் என்னுடன் பேசுவதில்லையென கேட்டுள்ளார். தன்னுடன் பேசாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்....