Tagged: எம்.ஆர். ராதா

கோயிலுக்கு வராதே!

“மனம் புண்படுகிறது என்று நினைப்பவர்கள் எல்லாம் எனது நாடகத்தைப் பார்க்க வரவேண்டாம்” என்று அறிவித்தார், மறைந்த புரட்சி நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. இது நேர்மையான ஒரு கடவுள் “மறுப்பாளனின்” பிரகடனம்! “கோயில் கருவறைக்குள் நுழையாதே! இங்கே நான் மட்டுமே கடவுளின் பிரதிநிதி. இதோ பார், எங்களிடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது” என்று பூணூல் மார்பை தட்டிக் கொண்டே பேசுகிறார்கள் அர்ச்சகப் பார்ப்பனர்கள். இது பார்ப்பனத் திமிரின் அடையாளம். “உன்னை இழிவு செய்யும் கோயிலுக்கு ஏன் மானங்கெட்டுப் போகிறாய்? அங்கே அர்ச்சகப் பார்ப்பானிடம் தட்சணையை கொடுத்துவிட்டு, கை கட்டி கர்ப்பகிரகத்துக்கு வெளியே நிற்கிறாயே; இது அவமான மில்லையா? அப்படியே உனக்கு பக்தி பீறிட்டு நிற்கிறது என்றால் உடைக்க வேண்டிய தேங்காயையும், கொளுத்த வேண்டிய கற்பூரத்தையும் கோயிலுக்கு வெளியே உடைத்து, நீயே வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. ‘சூத்திரன்’ என்று இழிவுபடுத்தும் அர்ச்சகப் பார்ப்பானிடம் கை கட்டி நிற்காதே.” இது பெரியாரின் சுயமரியாதைக்கான...

நாட்டு விடுதலைப் போருக்குநாடகம் மூலம் தொண்டாற்றியவர்

நாட்டு விடுதலைப் போருக்குநாடகம் மூலம் தொண்டாற்றியவர்

நாடகத்தில் நடிப்பதற்கு பெண்கள் வரத்தயங்கிய காலத்தில் எம்.ஆர்.இராதாவின் ‘இரத்தக் கண்ணீர்’, ‘இலட்சுமி காந்தன்’ நாடகங்களில் துணிச்சலாக நடிக்க வந்தார் பிரேமாவதி என்ற 17 வயது பெண். இராதாவுக்கும் பிரேமாவதிக்கும் இடையே காதல் உருவாகி, திருமணம் செய்து கொண்டார்கள். பிறந்த குழந்தைக்கு ‘தமிழரசன்’ என்று பெயர்சூட்டினார்கள். அம்மை நோய் பாதிப்புக்குள்ளாகி, முதலில் ‘தமிழரசன்’ இறக்கிறார்; அடுத்த 3 நாள்களில் அதே நோய்க்கு பிரேமாவும் தனது 22 வயதில் இறந்து விட்டார். தனது அன்பு மனைவி, மகனுக்கு கோவையிலிருந்து பாலக்காடு போகும் வழியில் ஆற்றுப் பாலத்தைக் கடந்து நிற்கும் இடு காட்டில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாற்பதடி உயரத்தில் அவர்கள் நினைவாக கோபுரம் போன்ற நினைவுச் சின்னத்தை எழுப்பினார் எம்.ஆர். இராதா. அவ்வப்போது இந்த நினைவிடத்துக்கு வந்து நடிகவேள் கண் கலங்குவார். அந்த நினைவிடத்தின் கீழே பொறிக்கப்பட்ட  வாசகங்களும் மிகவும் முக்கியமானது. “பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டு செய்து...