Tagged: உண்டியல் திறந்த பாதிரியார்

மக்களுக்காக உண்டியலை திறந்து விட்ட பாதிரியார்!

மக்களுக்காக உண்டியலை திறந்து விட்ட பாதிரியார்!

நாடு இப்போது இருக்கும்  இக்கட்டான இந்த  சூழலில் … இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை , ஒரு சர்ச் பாதிரியார் வெளியிடுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது! கொச்சி அருகே காக்கநாடு பூக்காடுபடியில் உள்ள மார்ட்டின் டி போரஸ் கிறிஸ்தவ  தேவாலயத்தில் நடந்த சம்பவம் இது. அந்த சர்ச்சின்  பாதிரியார்தான், இந்த  அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கடந்த ஞாயிறு காலை பிரார்த்தனை முடிந்த  பின்,  சற்று நேரம் அமைதியாக இருந்த  அந்த சர்ச் பாதிரியார், சர்ச்சில் கூடி இருந்த மக்களை உற்று நோக்கினார். அவர்கள் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த கவலையை அவர் கண்கள் கண்டு கொண்டன. “அன்பானவர்களே…  நமது தேவாலயத்தின் உண்டியல் இன்று பிற்பகலுக்கு பின் திறக்கப்படும்.” பாதிரியார் இப்படி சொன்னவுடன், மக்கள் கொஞ்சம் திகைத்துப் போனார்கள். தொடர்ந்தார் பாதிரியார் : “பணம் தேவைப்படுபவர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப உண்டியலில்  இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.. நீங்கள் எடுத்த பணத்தை உங்களுக்கு...